நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் வினய் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் 2007-ல் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய்.
தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோ தி விளையாடு, மி ர ட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.
இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியுடன் 10ஆம் ஆண்டு திருமண நாளை உலக அதிசயங்களில் ஒன்றான, காதல் சின்னமான தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்பது தெரிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அல்லு அர்ஜுனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை அடுத்து மனைவி சினேகாவுடன் தாஜ்மகால் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு அவர் தனது மனைவியுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாட தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த ஆக்ரா காவல் துறைக்கும் தனது நன்றி என்று கூறி அது குறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் இது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாக்கள், டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் நடன போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டு பட்டம்வென்றுள்ளார்.
3, அப்பா உள்ளிட்ட சில படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். நடனத்தில் ஆர்வமும் திறமையும் இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேகும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான போஸ்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலர், நடன வீடியோவை வெளியிடும்படி பல நாட்களாக அவரிடம் கேட்டு வந்தனர். தனது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நடன வீடியோ ஒன்றை நேற்று கேப்ரியலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடன கலைஞர்கள் இருவருடன் இணைந்து அவர் ஆடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இது ஒரு லட்சத்து 8000 பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். பலர் பாராட்டி கருத்தும் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் நீண்ட நாள் கேட்டதற்காக இதை வெளியிடுவதாக குறிப்பிட்டு கேப்ரியலா இதனை பதிவிட்டுள்ளார்.
இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. ஏ ஆர் ரஹ்மான் முதலில் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்துள்ளார், திலீப்குமார் என்பது தான் உண்மையான பெயர்.
திலிப் குமாரின் அப்பா ஆர்கே சேகர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் 11 வயது இருக்கும் போதே இறந்துள்ளார்.
ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு அக்காவும், ஒரு தங்கச்சியும் இருந்துள்ளனர், வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது அப்பா பயன்படுத்தி இசைக்கருவியை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். இந்த வருமானத்தை வைத்து தான் இசையையும் கற்றுக் கொண்டுள்ளாராம்.
ஆன்மீகத்தில் அதிக விருப்பம் உள்ளவர் ஏ ஆர் ரஹ்மான். 1984ஆம் ஆண்டு ரஹ்மானின் தங்கைக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். அப்போது ஏ ஆர் ரஹ்மான் அம்மா கரி முல்லா ஷா கத்ரி என்பவரிடம் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி கூறியுள்ளார்.
அப்போது இஸ்லாமிய மதத்திற்கு மாறுங்கள் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ‘தி ஸ்பிரிட் ஆஃப் மியூசிக்’ இசையை கேட்டு ஏ ஆர் ரஹ்மானுக்கு இஸ்லாமிய மதத்தின் மீதான தா க் கம் ஏற்பட்டது. அதன் பிறகு தங்கையின் உடல் நிலையும் சரியானது.
அதன் பிறகு தான் 1989ஆம் ஆண்டு திலீப் குமார் என்ற இந்து பெயரை அல்லாஹ்ரக ஏ ஆர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது உலகளவில் ரசிகர்கள் கொண்டு பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் திலீப் குமார் என்கிற ஏ ஆர் ரஹ்மான்.
கோயம்புத்தூரை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். காலேஜ் முடித்த பின்பு பேங்க் வேலையில் சேர்ந்தார். எனினும் சினிமா மீது இருந்த தீராத காதல் காரணமாக குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 2016ல் இவரது குறும்படம் காலம், அவியல் என்ற ஆந்தாலஜி தொகுப்பில் வெளியானது. அதன் பின்னர் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட் ட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார்.
லோகேஷ் கமலின் வெறித்தனமான ரசிகன். அவர் படங்கள் தான் இவர் சினிமாவுக்கு வர இன்ஸபிரேஷன் என்பதும் நாம் அறிந்தது தான். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் அவர்களை வைத்து விக்ரம் படத்தை அடுத்து இயக்க உள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கிறது, தேர்தல் முடிந்த பின் ஷூட்டிங்.
கமல் தயாரிப்பில் ரஜினிக்காக ரெடியான கதை, ஆனால் கமல் அவர்கள் நடிப்பதாக உருவெடுத்த ப்ரொஜெக்ட் இது. இந்த காங்ஸ்டர் ஸ்டைல் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மாஸ்டர் படம் போலவே பவர்புல் கதாபாத்திரமாம்.
இந்த ரோலில் நடிக்கப்போவது யார் என பல பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி பாஹத் பாசில், பிரபுதேவா என சொல்லப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தை நடந்தது என்னவோ உண்மை தானம்.
இந்நிலையில் தற்பொழுது விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கட்டாயம் இந்த முறை உறுதியாகி விடும் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள். பக்கா மாஸ் தான் அப்போ.
நடிகைகள் சினிமாவில் சாதித்துவிட்டால் அடுத்தகட்டமாக பத்திரிக்கையாளர்கள் கேட்பது திருமணம் எப்போது என்பது தான்.
சிலர் கூலாக பதில் கூறுவார்கள், நடக்கும் போது கண்டிப்பாக அறிவிக்கிறேன் என்பார்கள்.
அண்மையில் நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் திருமணம் பற்றி கேட்க அதற்கு மிகவும் கோபமடைந்துள்ளார்.
அதோடு அவர், ஒரு பெண்ணை பார்த்து கேட்கும் கேவலமான கேள்வி, யாரும் இனி அப்படி செய்யாதீர்கள். ஆண், பெண் இருவருக்கும் சில கனவுகள் இருக்கும், திருமணம் மட்டுமே என்பது இல்லை என கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும் கொஞ்சம் அந்த நிகழ்ச்சி பரபரப்பாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிலும் இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடல் எடையில் கட்டுக்கோப்பாக வைத்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில், மலையாள படங்களில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் நடிகர் அஜித்திம் என்னை அறிந்தால் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து மிருதன், நானும் ரவுடிதான், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும், நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தில் அருமையான நடிப்பால் நல்ல வரபேற்பை பெற்று தற்போது மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.
அதற்கு காரணமாக இருந்தது, இணையத்தில் 15 வயதிலேயே போட்டோஹுட் பக்கம் சென்று டிரெண்டிங் லிஸ்ட்டில் சேர்ந்தார். சமீபத்தில் இவரது முகத்தை வைத்து இளம்பெண் அநாகரீகமாக ஆடையணிந்து லீக் செய்ததால் கஷ்டப்பட்டு அதில் இருப்பது நான் இல்லை என்று கூறி அழுதார்.
தற்போது அதையெல்லாம் மறந்து மீண்டும் போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார் அனிகா. தற்போது, வெள்ளை நிற ஆடையில் மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தல அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் “சினிமா எனது தொழில் தான், வித்தியாசமான படங்களில் நான் அதிகமாக நடித்து விட்டேன். மேலும் தொடர்ந்து சினிமா குறித்தே சிந்தித்து எனக்கு ம னஅ ழு த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
Rifle Shooting, Cycling, Remote Control Helicopter, Photography என எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உள்ளது. நான் நடிகனாக மட்டும் தொடர விரும்பவில்லை. எனக்கும் ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
இதற்காக ஒவ்வொரு பொங்கல், தீபாவளிக்கு ஒரு படம் என்ற சுமையை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை” என அஜித் தனது நெருங்கிய நண்பர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளாராம்.