பொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்!

பொன்னியின் செல்வன்…

மணிரத்னம் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடத்தி வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து நடிகர்களையும் வைத்து ஐதராபாத்தில் அரங்கு அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அங்கு படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஏலா ஏகானி அறிவித்துள்ளார். இதையடுத்து ஜெய்ப்பூரில் சில காட்சிகளை படமாக்க உள்ளாராம் மணிரத்னம்.

என் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்றி… சமந்தா வெளியிட்ட வீடியோ!!

சமந்தா…

தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது விண்னைத் தாண்டி வருவாயாதான். அந்த அளவுக்கு அவரிடம் இருந்து சிறப்பான நடிப்பை வாங்கியிருப்பார் கௌதம் மேனன். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரஹ்மானோடு அவர் முதல் முதலாகக் கூட்டணி அமைத்த படம் அதுதான்.

அதற்கேற்றார்போல பாடல்களும் எவர் க்ரீன் ஹிட்டாகின. அதே போல இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படத்தில் சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த படம் 2010 ஆம் ஆண்டு இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தின் 11 ஆம் ஆண்டை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து சமந்தா வெளியிட்ட வீடியோவில் கௌதம் மேனன் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘என்னுள் ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்த கௌதம் மேனனுக்கு நன்றி.

ஏனென்றால் எனக்கே அப்போது என் திறமை பற்றி தெரியவில்லை. இந்த பதிவை படித்துக் கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.

பெரும் வசூல்! உலகளவில் டிரெண்டிங்! ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை! ரிலீஸ் தேதி இதோ!

ஸ்பைடர் மேன் 3…

ஹாலிவுட் படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள் இந்திய சினிமாவிலும் இருக்கிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் வரவேற்பும் உலகளவில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அதிலும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்ததாக ஸ்பைடர்மேன் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

ஸ்பைடர் மேன் படத்தின் இரண்டாம் பாகமான Spiderman far from home கடந்த 2019 ல் வெளிவந்து உலகம் முழுக்க பெரும் வசூல் சாதனையை செய்தது.

இதன் மூன்றாம் பாகத்திலும் 2 ம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு புகைப்படங்களை நடிகர்கள் நடிகைகள் வெளியிட்ட நிலையில் ஸ்பைடர் மேன் ஹோம் ரெக்கர், ஸ்பைடர்மேன் ஹோம் ஸ்லைஸ், ஸ்பைடர் மேன் போன் ஹோம் என படத்திற்கு மூன்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் ஸ்பைடர் மேன் 3 என உலகளவில் ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது. ஆனால் படத்தின் 3ம் பாகத்திற்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என பெய்ர வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனராம்.

நீக்கப்பட்ட காட்சிகள்! பெரும் சர்ச்சை! கடும் எதிர்ப்பு! இத்தனை காட்சிகளா?

ராஷ்மிகா…

நடிகை ராஷ்மிகா வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். லவ் ரொமான்ஸ் ஹீரோயினாக தெலுங்கில் நடித்து வந்த அவருக்கு படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன.

இதனால் அவருக்கான மார்க்கெட்டும் கூடியது. சம்பளத்தையும் உயர்த்தினார். தமிழில் கூட நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகிறார்.

கன்னடத்தில் அவர் நடித்துள்ள பொகரு படம் கடந்த ஃபிப்ரவரி 18 ல் வெளியானது. துருவ் சார்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், பிராமண சமூகத்திற்கு களங்கும் விளைவிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக ச.ர்ச்.சை எ.ழு.ந்.தது. பிராமண சங்கத்தினர் எ.தி.ர்.ப்பு தெரிவித்தனர். போ.ரா.ட்.டம் நடத்தினர்.

இதனால் கர்நாடக ஃபிலிம் சாம்பர் ச.ம.ரச பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சர்.ச்.சை.க்குரிய 14 காட்சிகளை படத்தில் இருந்து நீ.க்.குவதாக இயக்குனர் ஒ.ப்.புக்கொ.ண்.டாராம்.

ஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி!!

ஷபானா மற்றும் ஜனனி…

சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். அதில் செம்பருத்தி சீரியல் நடிகைகளுக்கு பெரிய இடம் உண்டு.

ஷபானா மற்றும் ஜனனி இருவரும் செம்பருத்தி சீரியலில் ஒன்றாக நடிக்க நல்ல தோழிகளாக இருந்துள்ளனர். ஜனனி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார்.

இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் செம்பருத்தி சீரியல் பிரபலங்களான ஷபானா மற்றும் கதிரை சந்தித்துள்ளார்.

அவர்கள் மூவரும் துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் “கணேசாபுரம்” திரைப்படம்!

கணேசாபுரம்…

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது…

மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90’s காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.

இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா..! வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்..!

ரைசா வில்சன்…

பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் தற்போது The Chase, F.I.R உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் The Chase திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வித்தியாசமான உடையில் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்,

அந்த வகையில் தற்போது கடலில் படுத்தப்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு ” கடல் கன்னி பீல்ஸ்” என கேப்ஷன்போட்டுள்ளார்.

நீச்சல் உடை புகைப்படத்தை கேட்ட ரசிகர்- வீடியோவுடன் வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின், ஆனால் செம டுவிஸ்ட்..!

ஷெரின்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர் நடிகை ஷெரின். முதலில் பிக்பாஸில் பார்த்தவர்களுக்கு படங்களில் பார்த்த ஷெரினா இவர் என அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாதபடி இருந்தார். இப்போது மீண்டும் பழைய உடலமைப்பிற்கே வந்துவிட்டார்.

இவரிடம் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் நீச்சல் உடை புகைப்படத்தை கேட்டுள்ளார். ரசிகரின் ஆசையை நிறைவேற்ற ஷெரின் வீடியோவையே வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதில் தான் ஒரு டுவிஸ்ட், ரசிகர்களும் வீடியோவை செம வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை..! இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..?

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் 50% இருக்கைகள் மற்றும் பல கட்டுப்பாடுகள் உடன் வெளியான போதும் மக்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் நாட்டில் பாகுபலி சாதனையை தற்போது மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.

ஆம், தமிழ் நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக பாகுபலி 2 திரைப்படம் தான் அதிக திரையரங்க ஷேர் பெற்ற திரைப்படமாக உள்ளது, அதனை தற்போது மாஸ்டர் முறியடித்து தமிழ் நாட்டில் அதிக திரையரங்க ஷேர் பெற்று NO.1 இடத்தை பெற்றுள்ளது.

டிக்கிலூனா படத்தின் ஏதும் சொல்லாதே பாடல் வெளியாகியுள்ளது..!

ஏதும் சொல்லாதே…