பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை காட்டிக்கொடுத்த பாலா…. கொண்டாடும் ரசிகர்களின் தெறிக்கவிட்ட கமெண்ட்!!

பிக்பாஸ் சீசன் 4…….

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்துள்ள நிலையில், இந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்ற குழப்பம் இன்னும் தீராத நிலையில் இருந்து வருகின்றது.

தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தற்போது சீசன் 4 முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டிற்குள் ஐந்தாவது சீசனை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பல ரகசியங்களை வெளியிட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பிக்பாஸாக குரல் கொடுத்தவர் யார் என்ற ரகசியம் இன்னும் அவிழாமல் இருக்கின்றது.

ஆனால் சமீபத்தில் இவர் தான் பிக் பாஸ் குரல் கொடுப்பவர் என்று அவருடைய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.

இதனால் இவராகத்தான் இருப்பாரோ என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக பாலாவின் ட்விட் அமைந்துள்ளது.

ஆம் பிக்பாஸில் இரண்டாவது இடத்தினைப் பிடித்த பாலாஜி பிக்பாஸ் குரல் கொடுப்பவர் என்ற காணொளிக்கு கீழே என்ன அண்ணா எப்படி இருக்கீங்க? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் அடுத்தடுத்து கமெண்ட் செய்து பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை பாலாவே கூறிவிட்டதாக கூறி வருகின்றனர்.

பிரபல நடிகையின் சீரியலை பாதியில் நிறுத்தும் சன் டிவி.. கேட்காத காதுக்கு ஹெட்செட்டு, பாய்சன் குடிக்க பல்செட்டு!

சீரியல்………

படங்களை விட சீரியல் மோகம் எப்போதுமே தாய்மார்களுக்கு அதிகம். சீரியல் போடும் நேரத்தில் வீட்டிற்குள் திருடன் வந்தால் கூட தெரியாத அளவுக்கு சீரியலில் மூழ்கியிருப்பார்கள். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை தயாரித்து குடும்பங்களை கெடுத்து வருகின்றனர்.

குடும்பத்தை கெடுக்கும் சீரியல்களை தயாரிப்பதில் முதலிடம் எப்போதுமே சன் டிவிக்கு தான். வாரத்தில் 6 நாட்கள் சீரியல் தான். வாரத்தில் 6 நாட்களும் வீட்டில் கணவன் ம னைவி க்குள் வெ ட் டு கு த் து அளவிற்கு சென்று விடுகிறது பிரச்சனை.

தற்போது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சீரியல்கள் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஹிந்தி சீரியலில் தான் வெற்றி பெற்ற சீரியலின் தொடர்ச்சியை எடுப்பார்கள். தற்போது தமிழிலும் அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சித்தி சீரியலின் இரண்டாம் பாதம் சித்தி-2 என்ற பெயரில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சித்தி சீரியலில் நாயகியாக நடித்த ராதிகாவே சித்தி2 சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான சித்தி2 சீரியல் எதிர்பார்த்த டிஆர்பியை பெறவில்லையாம். இருந்தாலும் ராதிகாவின் பெயருக்காக அந்த சீரியலை ஓட்டி வருகிறார்களாம் சன் டிவியினர். இந்நிலையில் விரைவில் சித்தி 2 சீரியல் நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து ராதிகாவிடம் நேரடியாக ஒரு ரசிகர் கேட்ட, இல்லவே இல்லை என மறுத்துள்ளார் ராதிகா. ஆனால் உப்பு சப்பு இல்லாமல் செல்லும் சித்தி 2 சீரியல் எப்போது வேண்டுமானாலும் கடையை மூடி விட்டு கிளம்பி விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

நீர் சொட்ட சொட்ட ராசி கண்ணா.. வைரலாகும் புகைப்படங்கள்!!

ராசி கண்ணா..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராசி கண்ணா(Raashi Khanna) தற்போது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து முன்னணி நடிகை இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

rasik

தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே ராசி கண்ணாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ராசி கண்ணா நடித்த சில படம் தமிழில் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அடுத்ததாக ராசிகன்னா நடிப்பில் தமிழில் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், சுந்தர் சியின் அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கே பச்சா போன்ற படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

இந்நிலையில் ராசி கண்ணா தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து ஓய்வெடுக்க ரேசாட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கே நீச்சல் குளத்தில் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

கருப்பு உடையில் நீர் சொட்டச் சொட்ட ராசிகன்னா வெளியிட்டுள்ள நீச்சலுடை புகைப்படங்கள் கன்னா பின்னாவென்று இணையதளங்களில் வைரலாக வருகின்றன. பார்த்ததும் பத்திக்கும் இந்த புகைப்படங்கள்தான் இன்றைய இணையதள டிரெண்டிங்.

பட வாய்ப்பும் இல்ல, நடிச்ச படமும் ஓடல.. ஆனா இளம் நடிகைக்கு கோடிக்கணக்கில் குவியும் சொத்துக்கள்!!

இளம் நடிகை………

அக்கட தேசத்திலிருந்து வந்த இளம் நடிகை ஒருவர் படவாய்ப்பு இல்லாத சமயத்திலும் கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வரும் விஷயம் கோலிவுட் வட்டாரங்களில் உள்ள கிசுகிசு மன்னர்களின் காதுக்கு எட்டி விட்டதாம்.

இசையமைப்பாளர் ஒருவரின் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே அரைகுறை உடை, பப்ளியான தோற்றம் என அனைவரையும் ரசிக்க வைத்தார். அடுத்தடுத்து இரண்டாம் கட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்டார்.

அவரது நேரமோ என்னமோ, அந்த நடிகை நடித்த எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. நல்ல படம் நடித்தால் கண்டுக்க மாட்டார்கள் போல என நினைத்து அடல்ட் படத்திலும் நடித்தார். முடிந்த வரை கவர்ச்சி காட்டியும் ரசிகர்கள் ஏறெடுத்து பார்க்கவில்லை.

இதற்கிடையில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை சமீப காலமாக காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஹீரோவாக பெரிய அளவு வெற்றியை சுவைக்க முடியாத அந்த நடிகர் தற்போது பிரதேசத்திலும் அக்கட தேசத்தில் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போதைக்கு அக்கட தேசத்தில் அந்த நடிகருக்கு நெகட்டிவ் ரோலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. ஆனால் சென்னையில் முன்னணி நடிகை ஒருவர் தங்கியிருக்கும் விலையுயர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இந்த மார்க்கெட் இல்லாத இளம் நடிகையும் ஒரு வீடு வாங்கி விட்டாராம்.

இது அந்த முன்னணி நடிகைக்கு சந்தேகத்தை கிளப்பி விட்டதாம். சந்தேகப்பட்டு கொண்டிருக்கும்போதே அருகில் இன்னொரு வீட்டையும் வாங்கிவிட்டாராம் அந்த இளம் நடிகை.

எப்படி வாய்ப்பு இல்லாமல் கோடி கோடியாக சொத்து சேர்த்து வருகிறார் என அந்த முன்னணி நடிகை கிளப்பி விட தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அந்த இளம் நடிகை மீது தவறான பார்வை ஏற்பட்டு விட்டதாம். அவரோ என் காதலர் சம்பாதிக்கிறார், நான் வாங்குகிறேன், இவளுக்கு என்ன? என்று செம டென்ஷனில் உள்ளாராம்.

தனுஷை கட்டியணைத்த மாளவிகா மோகன்.. இணையத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம்!!

மாளவிகா மோகன்……

சமீபகாலமாக ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்து துறைகளிலும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது D 43 எனும் பெயரிடாத படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார்.

இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடி மாளவிகா மோகன் மற்றும் சுருதி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மாளவிகா மோகன் முதல்கட்ட படப்பிடிப்பு மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதிதாக உள்ளது என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்க்கும்போது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும் அவர்களுடன் மீண்டும் பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் இதனை தெரியப்படுத்தும் வகையில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவெஞ்சர்ஸ் படக்குழுவினருடன் நடிப்பதற்கு தற்போது தனுஷ் வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அஜித்தை போல் தேடிப்போய் உதவி செய்யும் கவுண்டமணியின் மகள்.. உணர்ச்சிவசப்பட்டு உண்மையை சொன்ன பிரபலம்!!

கவுண்டமணியின் மகள்..

தமிழ் சினிமாவில் காமெடியன் ஜாம்பவானாக விளங்குபவர் கவுண்டமணி. இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

கவுண்டமணி மற்றும் செந்தில் நடிப்பில் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி எத்தனை ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து தான் வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து உருவான காமெடிகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளது. சமீபகாலமாக கவுண்டமணி மகள் மற்றும் மருமகள் அடிக்கடி புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு சென்று நன்கொடை கொடுத்துள்ளனர். அதனை கவுண்டமணி நண்பரான பயில்வான் நேரில் பார்த்துள்ளார். அதனைப் பார்த்த இவர்கள் தயவுசெய்து நாங்கள் நன்கொடை செய்ததை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று கேட்டுள்ளனர். புகைப்படத்தில் இருப்பது கவுண்டமணியின் மகள்.

அஜித்தை போல் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது போன்று தற்போது உதவி செய்து வருகிறார் கவுண்டமணியின் மகள்.

இதற்குக் காரணம் நெருங்கிய உறவுகள் யாராவது புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதன் விளைவு தற்போது உதவும் மன நிம்மதி கொடுத்துள்ளது.

ஆனால் ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் செய்யும் இந்த நல்ல செயலை இவ்வுலகிற்கு வெளிக் கொண்டு வந்து விட்டேன் என அவரது நண்பர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பணத்தாசையால் மொத்தத்தையும் இ ழ ந்த நடிகைகள்.. சினிமா கற்றுக்கொடுத்த பாடம்!!

நடிகைகள்………

தமிழ் சினிமாவில் நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டியும் பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளனர். அதில் ஒரு சில நடிகைகள் தோல்வியையும் சந்தித்துள்ளனர். அந்த வரிசையின் பட்டியலில் தற்போது நமிதா,பானுப்பிரியா, ராதிகா சரத்குமார் மற்றும் ரம்பா போன்றவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நமிதா: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நமீதா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமாவில் வெற்றி பார்த்த நமிதா அதே வெற்றியை ரியல் எஸ்டேட்டில் பார்க்க ஆசை பட்டுள்ளார். அதற்காக தனது சம்பாதித்து அனைத்து பணங்களையும் ரியல் எஸ்டேட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால் பின்பு ரியல் எஸ்டேட்டில் இருந்து விலகிவிட்டார்.

பானுப்பிரியா: தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்த பானு பிரியாவிற்கு படங்களை தயாரிப்பதற்கான ஆசை வந்துள்ளது. அதனால் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். அந்த படம் பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து கொடுக்காமல் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் சினிமாவில் படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இருந்து விலகியுள்ளார்.

ராதிகா சரத்குமார்: சமீபகாலமாக ராதிகா மற்றும் சரத்குமார் பிஸியாக நடித்து வரும் நடிகர்களாக உருவாகியுள்ளனர். அந்த அளவிற்கு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளனர். சமீபத்தில் கூட சூர்யாவின் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவர்களும் ஒரு காலத்தில் சொந்த படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்து பல கோடியை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் ராடன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பணத்தை அனைத்தையும் புத்திசாலித்தனமாக எடுத்துள்ளனர்.

ரம்பா: 2003 ஆம் ஆண்டு 3 ரோசஸ் எனும் படத்தில் நடித்து சொந்தமாக தயாரித்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது ரம்பாவை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது.

அதன் பிறகு எந்த படத்தையும் தயாரிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் படத்தை நடித்து ஓரளவிற்கு தனது வாழ்க்கையை மீட்டுள்ளார்.

இனிமேல் படம் தயாரிப்பிர்களா என கேட்டாள் நான் தயாரித்த வரைக்கும் போதும் இனிமேல் என்னை அழ விடுங்கள் என கூறி இன்று வரை எந்த படத்தையும் தயாரிக்காமல் அமைதியாகவே இருந்து வருகிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை ட்ரைலர் பார்த்த பின் மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யாவிடம் பாராட்டியது யாரை தெரியுமா!!

நெஞ்சம் மறப்பதில்லை………

மூன்று இயக்குனர்களின் கூட்டணயில் ஆரம்பமான ப்ரொஜெக்ட். கவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படமே நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கெஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா, பாபி சிம்ஹா, பிரேம்ஜி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா. ஜி கே பிரசன்னா எடிட்டிங்.

ஜனவரி 2016 ஆரம்பிக்கப்பட்டு ஜூன் மாதமே முடிந்த படம். எனினும் பல்வேறு காரணங்களால் ஐந்து வருடமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த வருடம் மார்ச் 5 திரை அரங்கில் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தினை பற்றி எஸ் ஜே சூர்யா பிரபல யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்பொழுது யுவன் படத்திற்கு அருமையாக BGM அமைத்து கொடுத்ததாக சொன்னார். மேலும் ட்ரைலரை மகேஷ் பாபு பார்த்தாராம். அப்பொழுது ஒரு கணம் எஸ் ஜே சூர்யாவை பார்த்தாராம், பின்பு “யுவன் கிழ்ச்சிட்டாருல்ல.” என சொன்னாராம்.

பொதுவாகவே செல்வாவின் படங்கள் வெளியாகும் சமயத்தில் பிளாப் என்பர், ஐந்து ஆறு வருடம் கழித்து தூக்கி வைத்து கொண்டாடுவர் கோலிவுட்டில். இப்படம் 5 வருடம் கழித்து தான் ரிலீஸ் ஆகிறது, எனவே அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும், புரியும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

அட ரம்யா பாண்டியனின் தங்கையா இது..? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

கீர்த்தி பாண்டியன்………

முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலமை மாறிவிட்டது. சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர்.

அந்தவகையில் சேலை அணிந்து, கவர்ச்சியான தன் இடுப்பைக் காட்டியே அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன். ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளீஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி வாய்ப்புக் கொடுத்தது.இப்போது இவரது சகோதிரி கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியில் குதித்துள்ளார். தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த கீர்த்தி பாண்டியன், அக்காவுக்குப் போட்டியாக நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அடடே அக்காவுக்கே போட்டியா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்……

லோகேஷ் கனகராஜிடம் பவானி கேரக்டருக்கு விஜய் சேதுபதி வைத்த ஒரே ஒரு கோரிக்கை.. கசிந்த முக்கிய தகவல்!

மாஸ்டர்……..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்த படம் தான் மாஸ்டர். தற்போது வரை மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 240 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதைவிட பேரும் புகழும் கிடைத்தது என்னவோ பவானிக்கு தான்.

கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவிட்டது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு முன்பாக லோகேஷ் கனகராஜிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம். அதன்படி லோகேஷ் கனகராஜ் பவானி கதாபாத்திரத்தை உருவாக்கியதால்தான் பெரிய அளவில் பெயர் கிடைத்ததாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி ஈவு தீவு இரக்கமில்லாத கொடூர வில்லன் என பேட்டிக்கு பேட்டி கூறிக்கொண்டிருந்தார். அப்படி கொடூர கதாபாத்திரம் இருந்தாலும் அதை ரசிக்கும்படி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாராம்.

மேலும் இரண்டு குழந்தைகளை கட்டித் தொங்கவிடும் காட்சியும் வைத்திருந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த காட்சியை முடிந்தவரை நீக்கி விடுங்கள் என லோகேஷ் கனகராஜூக்கு கோரிக்கை வைத்தாராம் விஜய் சேதுபதி. அடிப்பது கூட ஓகே, ஆனால் தூக்கி தொங்கவிடுவது எல்லாம் எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது என வருத்தப்பட்டாராம் விஜய் சேதுபதி.

அதன்படி லோகேஷ் கனகராஜ் எடிட் செய்து காட்சியை மாற்றி அமைத்து விட்டாராம். மேலும் விஜய் சேதுபதி அடிவாங்கும் போது கூட ஒரு குழந்தை அழுத வீடியோ ஒன்று வைரலானது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். வில்லத்தனத்திலும் ரசிக்கும்படி செய்த லோகேஷ் கனகராஜூக்கு ஒரு சல்யூட்.