அஜித் கைக்கு போன தல61 இயக்குனர்கள் லிஸ்ட்.. இந்த மூன்று பேரில் வாய்ப்பு யாருக்கு?

நேர்கொண்ட பார்வை……

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தற்போது வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக ஸ்பெயின் பறக்கிறது படக்குழு.

இதனை தொடர்ந்து தல அஜித் தற்போது தல 61 படத்திற்கான இயக்குனர்கள் வேட்டையில் இறங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்காக கிட்டத்தட்ட மூன்று இயக்குனர்களை இறுதியாக தேர்வு செய்து வைத்துள்ளாராம் தல அஜித்.

அதில் முதலிடத்தில் இருப்பது வினோத் தான். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்துடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அஜித் வட்டாரங்கள்.

அடுத்த இடத்தில் இருப்பது சுதா கொங்கரா. சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு தல அஜித்திடம் ஒரு கதை கூறியுள்ளாராம். ஆனால் கதை கேட்ட பிறகு அஜித் தற்போது வரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையாம். இதனால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார் சுதா.

மூன்றாவது இடத்திற்கு இரண்டு இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு யாருமில்லை. தல அஜித்தை வைத்து ஏற்கனவே பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் ஒரு பக்கம். கிரீடம் என்ற சுமாரான படத்தை கொடுத்த ஏ எல் விஜய் ஒரு பக்கம். இவர்களில் யாரை தல அஜித் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் வினோத்தின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அனேகமாக தல 61 படத்தை வினோத் இயக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். சொல்ல முடியாது, சிறுத்தை சிவா போல் வினோத்தும் தல அஜித்துக்கு தொடர்ந்து நான்கு படங்கள் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வருங்கால அரசியலுக்கு அடிக்கல் நாட்டிய தனுஷ்.. போயஸ் கார்டனில் பல கோடியில் உருவாகும் பங்களா பூஜை புகைப்படங்கள்!!

தனுஷ்……….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என வேற லெவலில் கெத்து காட்டி வருகிறார். தற்சமயம் இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் கைவசம் அதிக படம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ் தான்.

பட விஷயத்தில் மட்டும் விஜய் சேதுபதிக்கும் தனுஷுக்கும் போட்டி ஏற்படுகிறது என்று பார்த்தால் தற்போது இந்தியிலும் விஜய் சேதுபதி மார்க்கெட் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் ஜகமே தந்திரம் படத்தைப் பொருத்தவரை தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் இடையில் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தின் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு விரைவில் அவெஞ்சர்ஸ் கூட்டணியில் த கிரே மேன் படத்தில் இணைவதற்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம். இதற்கிடையில் தனுஷின் நீண்டநாள் ஆசையான போயஸ் கார்டனில் பகுதியில் பல கோடி மதிப்பில் ஒரு வீட்டை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதில் தனுஷை தொடர்ந்து தனுஷின் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். மீண்டும் பழைய தெம்புடன் வலம்வரும் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தால் அவரது அரசியல் வாரிசாக தனுஷ் இருப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. இருந்தாலும் வருங்காலத்தில் தனுஷ் அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் மாமனார் வீட்டுக்கு பக்கத்திலேயே வீடுகட்டி குடிபோக உள்ளாராம்.

கவின் காதல் என்னாச்சு என கேட்ட ரசிகர்கள்? ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய லாஸ்லியா!!

கவின் மற்றும் லாஸ்லியா…….

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரபலங்கள் தான் கவின் மற்றும் லாஸ்லியா. கவின் ஏற்கனவே விஜய் டிவியில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பிரபலம்.

ஆனால் லாஸ்லியா இலங்கையில் ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அவரை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களம் இறக்கி விட்டு தற்போது சூப்பர் ஸ்டார் நாயகியாக மாற்றிவிட்டனர். அந்தளவுக்கு லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

லாஸ்லியாவை பற்றி ஒரு சின்ன செய்தி கிடைத்தாலும் அதை இணையதளங்களில் டிரெண்ட் செய்து விடுகின்றனர். மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இடையில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த சீசன் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் சமூக வலைதளங்களில் கவின் மற்றும் லாஸ்லியா புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் புரளியை கிளப்பி விட்டனர். இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களில் சிலர் கவின் காதல் என்னாச்சு? என கேட்டுள்ளனர்.

இதனால் டென்ஷனான லாஸ்லியா, தேவையில்லாத விஷயங்களை கிளற வேண்டாம் என ஒரே வார்த்தை கூறி விட்டாராம். இதனால் கவிலியா ஆர்மியே சோகத்தில் இருக்கிறதாம். நட்சத்திர ஜோடி ரேஞ்சுக்கு பேசப்பட்ட கவின் லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குக் வித் கோமாளி புகழுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பட லிஸ்ட்!!

புகழ்………

என்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அ டி த் துக்கொள்ள ஆளே கிடையாது என்பது தான் உண்மை.

அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சாதித்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அதில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது அந்த வகையில் குக் வித் கோமாளி புகழும் இடம் பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட அதிகமான ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உள்ளனர். சமையல் நிகழ்ச்சியில் காமெடி நட்சத்திரங்களை போட்டு பயங்கர என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதில் புகழ் என்பவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சினிமாவிலும் கால்பதிக்க தொடங்கியுள்ளார் புகழ். அந்த வகையில் முதல் படமே தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பட வாய்ப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தில் புகழ் நடிக்கவிருந்த நிலையில், முடி வெட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மாஸ்டர் படத்தை நிராகரித்து விட்டாராம்.

அதனை தொடர்ந்து அருண்விஜய் நடிக்கும் AV33 படத்தில் முக்கிய காமெடியனாக களமிறங்கியுள்ளார் புகழ். இதனைத் தொடர்ந்து சூர்யா 40 படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இன்னும் சில வருடங்களில் வைகைப்புயல் வடிவேலு இடத்தை புகழ் பிடிப்பார் என நம்பலாம்.

பிக்பாஸுக்கு பிறகு அழுமூஞ்சி அனிதாவுக்கு அடித்த அதிஷ்டம்.. வாயுள்ள பிள்ளை பொழைச்சுக்கும்!

அனிதா………

நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட அனிதா சம்பத் அதன்பிறகு அதே ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். மற்றவர்கள் செய்த அனைத்துமே அனிதாவுக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் அனிதாவின் எலிமினேஷனை ரசிகர்களால் தாங்க முடியவில்லை. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதன்பிறகு அனிதா சம்பத்தின் தந்தை இ ற ந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவ்வளவு சோதனைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அனிதா சம்பத்துக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளதாம். தற்போது நிறைய படவாய்ப்புகள் குவித்து கொண்டிருக்கிறதாம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள்.

தற்போது அனிதா சம்பத் பிரபல முன்னணி நடிகரின் படத்தில் செய்தி தொடர்பாளர் கதாபாத்திரத்திலும், மற்றொரு நடிகரின் படத்தில் நடிகைக்கு தோழி கதாபாத்திரத்திலும் நடிக்க கமிட்டாகி விட்டாராம்.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகையாக மாறி விடுவார் என்கிறார்கள். இதற்கு முன்பே விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அனிதா சம்பத் நடித்திருந்தாலும் பெரிய அளவு அவருக்கு முக்கியத்துவம் இருந்ததில்லை.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்துச்சென்று பெரிய வாழ்க்கையை கொடுத்துவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் விரைவில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

42 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரம் ஆகிறாரா டிடி(DD)? அடுத்த கல்யாணம் ரெடியாமே!!

திவ்யதர்ஷினி………

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.

தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.

அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது.

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. இப்படியே போனால் வாழ்க்கை மோசமாகும் என தெரிந்த திவ்யதர்ஷினியின் குடும்பத்தினர் அவசர அவசரமாக திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் ஜாதகம் திவ்யதர்ஷினி உடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் இருப்பதை தெரிந்து வளைத்துப் போட்டு விட்டார்களாம். இது விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து வெளியான செய்தி தானே தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. விரைவில் திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

வதம் படத்தின் ட்ரைலர் வெளியானது!

வதம் ட்ரைலர்…

21 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஷாலினி அஜித்.. ஆனா அதுக்கு தல போட்ட ஒரே கண்டிஷன்!!

ஷாலினி…….

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதேபோல், ஷாலினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ‘காதலுக்கு மரியாதை’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஷாலினி, தல அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். அதற்குப் பிறகும் கண்ணுக்குள்-நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற சில படங்களில் ஷாலினி நடித்துள்ளார். கல்யாணத்துக்கு பிறகு ஷாலினி எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாலினி தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில், வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காதலுக்கான புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘அலைபாயுதே’ தான். இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்க, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீஸில் பெரும் சாதனை புரிந்தது.

தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம். தல அஜித்துக்கு ஆஸ்தான இயக்குனர் மணிரத்தினம்.

30 கோடி தூக்கி கொடுத்த பிரபல நடிகை.. இணையத்தில் தரிசிக்கும் ரசிகர்கள்!!

காஞ்சனா……..

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஞ்சனா அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் காஞ்சனாவை பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு தனது நடிப்பால் அதிகமான ரசிகர்களை அந்த காலத்தில் சேர்த்து வைத்திருந்தார். காஞ்சனாவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை அன்போடு கலர் கட்டழகி காஞ்சனா என பெயர் சூட்டினர். அந்த அளவிற்கு திரை வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகளை பார்த்துள்ளார்.

பின்பு காஞ்சனா ரைஸ் மில் ஓனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சில காலங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த காஞ்சனா ஒரு சில காலங்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்தார்.

இப்போது இவர் சென்னையில் உள்ள டிநகரில் ஜி என் சிட்டி ரோட்டில் 1500 ஸ்கொயர் ஃபீட் திருப்பதி கோயில் கட்ட 30 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உள்ளவர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது இந்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 1 கோடி, 2 கோடி இல்லை 30 கோடி கொடுத்து உள்ளதால் இந்த நடிகைக்கு கூட கோயில் கட்டலாம் எனவும் கூறி வருகின்றனர்.

வைரலாது மம்முட்டி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது ரஜினி கெட் அப் ஆச்சே

மலையாள……

மலையாள சினிமாவில் சீனியர் நடிகராக இருந்தாலும், இன்றும் அப்டேட்டுடன் இருப்பது தான் மம்மூட்டி அவர்களின் ப்ளஸ். இன்றும் ரசிகர்களின் மனதில் பாக்ஸ் ஆபிசில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துள்ளார்.

மம்முட்டி நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்துள்ளார் . இவர் மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாக் டவுன் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 200 நாட்களாக தனது வீட்டை விட்டு வெளிவராத மெகா ஸ்டார் மம்முட்டி தோட்டக்கலை, போட்டோகிராபி என நேரத்தை செலவிட்டு வந்தார். 69 வயது என சொல்லும் பட்சத்தில் யாரும் நம்ப கூட மாட்டார்கள்.

தி பிரைஸ்ட், ஒன், பீஷ்ம பர்வம் அடுத்தடுத்து உள்ளது இவரது சினிமா லயன் அப். இயக்குனர் அமல் நீரத் உடன் கூட்டணி போடும் படம் தான் பீஷ்ம பர்வம்.

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் சமாச்சாரம் நிறைந்த படமாம். சோபின் சாஹிர், லேனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த கெட் அப் போஸ்டரை பார்த்த நம் நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா என்கிற கரிகாலன் லுக் ஆச்சே இது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.