அஜித்தின் 60வது படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் தான் இப்பட இயக்குனரும்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின் படக்குழு குஜராத் செல்ல இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அஜித் தனது 61வது பட இயக்குனரை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் இயக்குனர் வினோத்திற்கு குழந்தை பிறந்தது, அதற்கு வாழ்த்து கூற போன் செய்த அஜித் அப்போதே எனது 61வது படத்தையும் நீங்களே இயக்குங்கள் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய தொகுப்பாளினி பணிபுரிகிறார்கள். இப்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.
இவரும், மாகாபா ஆனந்தும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகள் படு ஹிட்டாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.
எப்போதும் போல புரொமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஷாக். அதாவது இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
இதனால் ரசிகர்கள் பிரியங்காவிற்கு என்ன ஆனது அவர் ஏன் நிகழ்ச்சியில் இல்லை என கடும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படம் ஒன்றில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வி ழுந்து ம.ர.ண.ம.டை.ந்.த செய்தி அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹலிதா ஷமீன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் சில்லு கருப்பட்டி.
இதில் ஒரு பகுதியில் நடித்திருந்தவர் தான், நடிகர் ஸ்ரீராம். ஆம் வயதான காதல் கதை பகுதியில் தனது நடிப்பில் ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.
60 வயதாகும் நடிகர் ஸ்ரீ ராம், தனது பெசன்ட் நகர் வீட்டிலிருந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே வி.ழு.ந்.து.ள்ளார்.
மருத்துமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரின் மூக்கில் இருந்து அதிகமாக இ.ர.த் த ம் க.சி.ந் து ள்ளது என அவரது ம.ர.ண.த்.தை உ.று.தி செ.ய்.து.ள்ளனர் மருத்துவர்கள்.
இந்த செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் 4வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரியில் முடிந்தது.
போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது அவர்களின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நேரத்தில் தான் தொலைக்காட்சி பிக்பாஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் நாம் பார்த்திராத சில விஷயங்கள் எல்லாம் Unseen என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
நடிகர் விஷ்ணு விஷால் ம.து போ.தை.யி.ல் பி ர ச்சினை செ ய் ததாக அவர் கு.டி.யி.ருந்த கு.டி.யி.ருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கா.வ.ல்.து.றை.யி.டம் பு.கா.ர் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
நான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு வருகிறேன்.
மேலும் நான் டயட்டில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் நான் எப்படி ம.து அ.ரு.ந்.து.வே.ன்? ஒரு லாஜிக் வேண்டாமா?
இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது அ.பா.ண்.ட.மா.ன கு.ற்.ற.ச்.சா.ட்.டை கூ.று.கி.ன்றனர்.
ஒரு சினிமாக்காரன் என்ற வகையில் சினிமா தொடர்பான நபர்கள் தினமும் என்னை சந்திக்க வந்து கொண்டிருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய அவர்கள் இதுபோன்ற பு.கா.ர்.க.ளை தெரிவித்துள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
6 pack dont suddenly appear if you drink everyday..
You got to be on strict diet and off alcohol completely for a long time..
Some people dont understand the LOGIC…
— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) January 23, 2021
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தார் என்பதும் ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இதில் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு மட்டுமன்றி போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’டாக்டர்’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுக்கும் விருந்தாக அந்த படத்தின் டீசர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரியங்கா அருள் என்பவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றாலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் சுமார் 10 மாதங்கள் நடைபெறும் என்பதால் இந்த வருட இறுதியில் தான் அயலான் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் ரகசியத்தை பிரபல நடிகை ஒருவர் கசிய விட்ட நிலையில், படக்குழுவினர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் அந்த பதிவை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும்,
இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகை அலிசான் டூடி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 8 என்று குறிப்பிட்டிருந்தார்.
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் திடீரென அவர் ரிலீஸ் தேதியை அறிவித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து அவர் உடனே நீக்கி விட்டார் இருப்பினும் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ரசிகர்கள் பலர் இதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். குறிப்பாக சமூக வலைதளங்களில் வித்தியாசமான புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது டுவிட்டரில் எமோஜி பெறப்படுவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. விஜய் நடித்த மெர்சல், ரஜினிகாந்த் நடித்த ’காலா’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ பிரபாஸ் நடித்த ’சாஹோ’ ஆகிய படங்கள் ரிலீசானபோது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக நடிகை ஒருவரின் படம் ரிலீசாகும்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா நடித்துள்ள ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த தொடரின் புரமோஷனுக்காக டுவிட்டரில் சமந்தா படத்தின் எமோஜி பெறப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகை ஒருவருக்கு டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பதும் அந்தப் பெருமை சமந்தாவுக்கு தற்போது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சமந்தா ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 52 வயது அஜித் பட வில்லன் நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் காதலிக்கும் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்த ’வேதாளம்’ உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ராகுல் தேவ்.
இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார் என்பதும் இவருக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனைவி மறைந்தபின் பல வருடங்களாக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த ராகுல்தேவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த முக்தா கோட்சே என்ற நடிகையை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இவர்தான் தமிழில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ராகுல் தேவ் மற்றும் ,முக்தா கோட்சே ஆகிய இருவருமே தங்களுடைய காதலை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த காதல் குறித்து நடிகை முக்தா கூறியபோது ’காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை. அதேபோல் காதல் என்பதை கேட்டு வாங்க முடியாது.
அது தானாக வரும் ஒரு உணர்வு. எங்களுக்குள் எப்படி காதல் வளர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் முதல் முதலாக ஜூலை 3ஆம் தேதி சந்தித்துக் கொண்டதை அடுத்து அந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறோம்’ என்று கூறியுள்ளார். விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.