ஹன்சிகாவின் கடைசி வாய்ப்பு: மஹா கொடுத்த புதிய அப்டேட்!

ஹன்சிகா…

மஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். ஹோம்லி லுக்கில் வந்த ஹன்சிகா நாள்டைவில் கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

மாப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், புலி, வாலு, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 என்று வரிசையாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மஹா என்ற படத்தில் நடித்துள்ளார். யுஆர் ஜமீல் இயக்கத்தில், எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்குப் பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்பு சிறப்புத் தோற்றத்தில் அதுவும் பைலட்டாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர், படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு அனைத்து காட்சிகளை விறுவிறுப்பாக எடுத்து முடித்துவிட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது குறித்து ஹன்சிகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது என்னுடைய 50ஆவது படம் மஹா.

இப்படத்தில், என்னுடைய தனித்துவமான பயணம் இது. இதயப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளைத் தொடர்ந்து மஹா படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹா படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மஹா படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு எந்தப் படமும் கைவசம் இல்லை. முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது வாய்ப்பில்லாமல், தினந்தோறும் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

வைரலாகும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ !

சனம் ஷெட்டி…

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய் ய ம றுத்துவிட்டார்.

பு கா ரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அ டுக்கடுக்கான கு ற் ற ச்சா ட் டுக்களை கூறினார்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் பு கார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார்.

முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து ” தர்ஷன் இந்த பொண்ணை Miss பண்ணிட்டான்” என்று கூறும்படி நடந்துகொண்டு வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றரை வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/494141401

 

அ ரசியலுக்காக ஓவர்டைம் வேலை பாக்கும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்…

வரும் 31 ஆம் தேதி தனது அ ர சி யல் க ட் சி குறித்து அறிவிக்க உள்ள நிலையில், அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அதிக நேரம் பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எ திர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

நாடு முழுவதும் தா க் க த்தை ஏ ற்படுத்திய கொரோனாவுக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தை 40 சதவிகிதம் முடித்துவிட்டனர். வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் க ட் சி தொ ட ங்கி அ ர சி ய லில் மு ழு வீ ச் சில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்னதாக அண்ணாத்த படத்தில் தனது காட்சிகள் முழுவதையும் படமாக்கிவிட வேண்டும் என்று படக்குழுவினரை அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.

ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால், ஏற்கனவே திட்டமிட்டதை விட படு வேகமாக ஒவ்வொரு காட்சிகளும் படமாக்கப்பட்டுவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வரும் 30 ஆம் தேதி சென்னை திரும்பும் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி 31 ஆம் தேதி அ ர சி யல் க ட் சி கு றித்து அறிவிப்பு வெளியிடுகிறார். அதன் பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முடித்த பிறகு, அரசியல் கட்சி, பெயர், கொள்கைகள் குறித்து அறிவித்துவிட்டு முழுவீச்சில் தனது அ ர சி ய ல் ப ய ணத்தை ரஜினிகாந்த் மேற்கொள்வார் என்று எ திர்பார்க்கப்படுகிறது.

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் மூளைச்சாவு : கேரள திரையுலகினர் அதிர்ச்சி!!

ஷாநவாஸ்…

தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடியில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்.

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார்.

இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் க டு ம் எ தி ர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அந்த எ தி ர்ப்பையும் மீ றி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீ வி ரமாக ஈடுபட்டிருந்தார்.

இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு தி டீ ர் மா ர டை ப்பு ஏ ற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்குத் தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 9 மணியளவில் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சா வு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யூத்களுக்கு எடுத்துக்காட்டும், அப்பா – மகன் கதையில் சந்தானம்!

சந்தானம்…

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, ஏ1, டகால்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், சந்தானம் நடிப்பில் பிஸ்கோத் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஹர்பஜன் சிங், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, முனீஷ்காந்த், ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விரைவில் டிக்கிலோனா படம் திரைக்கு வரயிருக்கிறது.

இதே போன்று பாரிஸ் ஜெயராஜ் படமும் திரைக்கு வர தயாராகியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம் அறிமுக இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

மேலும், அரசியல் சார்ந்த சில டுவிஸ்டுகளும் இந்தப் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எம் எஸ் பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடிக்கிறார். புதுமுக நடிகை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், சந்தானம் தான் இந்தக் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். காமெடி கலந்த படமாக இருந்தாலும், அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கதை எனினும், ரசிகர்களிடையே உணர்ச்சி ரீதியான தொடர்பை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வழங்கும் கூழாங்கல் !

கூழாங்கல்…

மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் விக்னேஷ் சிவன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது.

முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. இது தொடர்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.

முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குனராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருப்பது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய இந்தத் தரமான படத்தைத் தயாரித்ததில் மகிழ்ச்சி.

நயன்தாரா, தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தயாரித்து, வழங்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் எனக்கு மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தருகிறது. திரைப்பட விழாக்களில் நமக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். நன்றி யுவன் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நிழல் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

பிக்பாஸ் 4 : டாஸ்க் முடிவுகளை வரிசைப்படுத்தும் போது ஆரியுடன் சண்டை போட்ட ரியோ !

பிக்பாஸ்..

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பால் கேட்ச் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் டிவி முன்பு இருக்க வேண்டும் என்றும், யார் பெயர் டிவியில் காட்டப்படுகிறதோ, அவர் வேகமாக ஓடிச்சென்று வெளியில் பந்தை பிடிக்க வேண்டும். இதில் போட்டியாளர்கள் தனித்தனியாக பங்கேற்கலாம் என்பதால் எந்த வித பிரச்னையும் எழாது.

இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் 4 முடிவு பெற உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நேற்று தொடங்கிய பால் கேட்ச் டாஸ்க் இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது. அதனால் போட்டியாளர்கள் தூங்காமல் கண்விழித்து பந்தை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.

அதனால் அவர்கள் பகலில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அதை விமர்சிக்கும் வகையில் தூங்காதே தம்பி தூங்காதே பாடலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போடப்பட்டு உள்ளது. அதன் பின் பந்தை பிடிக்கும் டாஸ்க் முடிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு வேறு ஒரு வில்லங்கமான டாஸ்க் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்கில் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் விவாதித்து ஒன்று முதல் ஒன்பது வரை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. அதனால் பிரச்சனை எதாவது வருமே என நீங்கள் எதிர்பார்ப்பது போலவே தான் நடந்தது.

சொன்னதை மீண்டும் சொல்ல மாட்டேன் என ரியோ சொல்ல அதற்காக ஆரி அவருடன் வாக்குவாதம் செய்கிறார். இதுக்கு பேரு தான் கார்னர் என ஆரி பற்றி புகார் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் ரியோ. ஆரி மற்றும் ரியோ இடையே தொடர்ந்து இது போன்ற சண்டைகள் அதிகம் வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

மீண்டும் உயிர் பெற்ற சிலம்பரசன் படம் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்பு..

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார் சிம்பு. சிம்புவின் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். தற்போது சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த சுவையூட்டும் செய்தியை கொண்டாடி வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர். அதே படத்தினை தான் நம் ஊருக்கு ஏற்றது போல மாற்றி ரெடி செய்தார் இயக்குனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளாராம்.

நாளை 24ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். கேப்டன் ஆப் தி ஷிப், அதாவது இயக்குனர் கிருஷ்ணா சிம்புவை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது என்றும், ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அப்டேட்டை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா கூறியிருந்தது.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த வாரம் தொடர்ந்து சிம்பு படம் பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலும் நம் செவிகளுக்கு எட்டியது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 4 : பால் கேட்ச் டாஸ்க்கின் புதிய பரிமாணம் ! போட்டியாளர்கள் அசத்தல் !

பிக்பாஸ் சீசன் 4..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வித்யாசமான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. வழக்கம் போல இதிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இந்த வாரம் B for Ball, C for Catch என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக கார்டனில் ஒரு செட்டப் வைக்கப்பட்டு இருந்தது.

அதில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும் என்றும், அதில் 5,10,20 மதிப்பெண்கள் என பந்தின் அளவை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். பந்து கீழே விழுந்துவிட்டால் அதற்கு முதல் சுற்றில் மதிப்பெண் இல்லை. இந்த டாஸ்க் நடக்கும்போது சண்டை வராமல் இருக்க இரண்டு அணிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய நடுவில் ஒரு டேப் ஓட்டினார் பாலாஜி.

கேமை நேர்மையுடன் விளையாட இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு விளையாட துவங்கினர். இரண்டு அணிகளும் ஒப்புக்கொண்டு நடுவில் ஒரு மார்க் வைத்து Fair ஆகி விளையாடலாம் என ஆரம்பித்தனர். ஆனால் அதனாலேயே இரண்டு அணிகளுக்கும் நடுவில் பிரச்சனை எழுந்தது. அவர் தள்ளிவிட்டார், இவர் இடித்துவிட்டார் என தொடர்ந்து பஞ்சாயத்து நடந்தது. இரண்டு அணிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டனர்.

முதல் சுற்றில் பந்துகளை நேராக பிடித்தால் மட்டும் தான் பாயிண்ட் என சொல்லப்பட்டது. கீழே விழுந்தால் அதற்கு புள்ளி இல்லை என சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது சுற்று தொடங்கியது. அதில் கீழே விழும் பந்துகளுக்கும் மார்க் என சொல்லப்பட்டது. அதனால் இனி கீழே விழுந்த பந்தை எடுப்பதற்கு சண்டை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அவர்களுக்கு உள்ளேயே ஒரு விதியை போட்டுக்கொண்டனர். இப்படி இரண்டு அணிகளும் விளையாடி கொண்டு இருந்த பொது சோம் மற்றும் ஆரி இடையே வாங்குவாதம் வெடித்தது.

அடுத்து புதிய சுற்று தொடங்கியபோது ரெட் பந்துகளை பிடித்தால் அல்லது தொட்டால் அந்த அணியின் மதிப்பெண்கள் பூஜ்யம் ஆக்கப்படும் என விதி போடப்பட்டது. முதல் சிவப்பு பந்தை பாலாஜி தொட்டுவிட்டதனால் அவர் அணியின் மதிப்பெண் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டது.

அதன் பின் இந்த டாஸ்க் இரவு முழுவதும் நடக்கும் என பிக் பாஸ் அறிவித்ததால் அனைவருக்கும் ஷாக் ஏற்பட்டது. இரண்டு அணியினரும் வெளியில் வந்து படுத்துவிட்டனர். ரியோ டீம் வெளியில் தூங்கி கொண்டு இருந்தபோது பாலாஜி டீம் அங்கு ஜாலியாக பாட்டு பாடி, காமெடி செய்து கலகலப்பாக இருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தூங்கிக்கொண்டிருந்த சோம் டாஸ்க் வரும் தருணத்தில் ஓடிச் சென்று பந்தை பிடிக்கிறார். LED-யில் போட்டியாளர்களின் பெயர் வந்துகொண்டிருக்க, பந்தை பிடிக்கச்செல்கின்றனர். ரம்யா பந்தை யார் பிடித்தது என்ற புதிய பிரச்சனையும் கிளம்புகிறது.

அப்போது தலைவா: இப்போது வெப் சீரிஸ்: போலீஸ் அதிகாரியாக கலக்கும் அமலா பால்!

அமலா பால்…

இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் பேண்டஸி வெப் சீரிஸ் ஒன்றில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, சூர்யா, பாபி சிம்ஹா, அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில், கடைசியாக வெளியான படம் ஆடை.

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நடித்த அமலா பாலின் ஆடை படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏராளமான கேமரா மேன்கள் முன்பு ஆடையில்லாமல் நடித்துள்ளார். என்னதான் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நீண்ட நாட்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அமலா பாலிற்கு தொடர்ந்து, தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது வெப் சீரிஸ் பக்கத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், கன்னடத்தில் பிரபல இயக்குநராக வலம் வரும் பவன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் குடி யெடமைதே (Kudi Yedamaithe) என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 8 எபிசோடுகள் கொண்ட குடி யெடமைதே என்ற வெப் சீரிஸ் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் அமலா பாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், போலிஸ் கதாபாத்திரத்தில் கலக்கும் அமலா பால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடித்த தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிக்கும் ராகுல் விஜய் டெலிவரி பாயாக நடித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் சீரிஸ் பேண்டஸி த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த வெப் சீரிஸ் தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் முக்கிய ரோலில் அமலா பால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.