ஷபானா..

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியல் TRPயில் பல சாதனைகளை செய்துள்ளது, இடையில் ஏனோ பின் தங்கியுள்ளது.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவும் இப்போது குறைந்து வருவதாக தெரிகிறது, எனவே சீரியலை முடிக்க தொடர் குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.

இந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் ஷபானா, ஆர்யன் என்பவரை காதலிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். அவரும் விஜய்யில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது பல வருட காதலுக்கு பிறகு முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஷபானா. அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram











































