தனுஷுடன்..

பிரபல முன்னணி நடிகரான தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஏரளாமாக அடிக்கடி வந்துள்ளது. குறிப்பாக அமலா பால் விவகாரத்து விஷயம் கூட தனுஷால் தான் நடந்தது என கூறி வந்தனர்.

என்ன தான் நடிகர் தனுஷ் நல்ல நடிகர் என்றாலும், கிசு கிசுக்களில் இவரை அடிச்சிக்க ஆளோ இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இதையடுத்து, தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் விவாகரத்து நடைபெற முழுக்க முழுக்க தனுஷின் இரவு பார்ட்டி தான் காரணம் என ஒரு செய்தி வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றால் இரவு பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான். அந்த பார்ட்டியில் யார் இருக்கிறார்களோ இல்லையோ தனுஷ் கண்டிப்பாக இருப்பார். அவருடன் குறிப்பிட்ட சில நடிகைகள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். அவர்களின் புகைப்படமும் லீக்காவது வழக்கம்.

அதேபோல் அன்று தனுஷுடன் அவரது மச்சினிச்சி சௌந்தர்யாவும் உடன் வந்திருந்தாராம்.

அந்த நேரத்தில் தான் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் என்பவருடைய நண்பர் அந்த பார்டிக்கு வந்து ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை கவனித்துள்ளார்.

அப்போது பார்ட்டியில் தனுசுடன் சௌந்தர்யா இரவு தங்கியதையும் கணவனிடம் போட்டுக் கொடுத்து விட்டாராம் அந்த நண்பர். இதன்பின்னர், அன்று இரவு பார்ட்டி முடித்து விட்டு மனைவி வந்து விடுவாள் என காத்துக் கொண்டிருந்த அஸ்வினுக்கு ஏமாற்றம் அடைந்ததை விட அந்த நண்பர்

சொன்ன விஷயம் கோபத்தை ஏற்படுத்த உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என கிசுகிசுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் உண்மையானதா? என அவர்களுக்கு தான் வெளிச்சம்.





















































