தனது ரசிகர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?

சூர்யா..

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சூர்யா நடித்து முடித்துள்ள பீம் ஜி திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது, இதன் போஸ்டர்களும் பெரிய வைரலானது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சூர்யாவின் அயன் பட காட்சிகளை தத்ரூபமாக ரீமேக் செய்திருந்தனர்.

அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சூர்யா ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார், அதில் “வாழ்க்கையிலே சாதிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு எதுவுமே தடையா இருக்க முடியாதுன்னு ஒரு மெசேஜ.

இப்ப இருக்க இளைஞர்களுக்கு நீங்க சொல்லிருக்கீங்க, All the best Little Brothers” என அவர்களுக்கு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் லாஸ்லியா,ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரைலர் அப்டேட் !!

பிரண்ட்ஷிப்..

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப்.

இப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். இதில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்கிறார்.

மேலும் அர்ஜுன், சதீஷ், KPY பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தமிழில் உருவாகும் இப்படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

மேலும், ஹர்பஜன் சிங் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியா வாரியரிடம் கேள்வி கேட்ட ரசிகர்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த சம்பவம்!

பிரியா வாரியர்..

செளிப்ரிடீஸ் என்றாலே அவர்களை பின் தொடர்வதிலும் அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளை கவனிப்பதிலும் ரசிகர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும். அந்த வகையில் ஒரு சினிமா பிரபலத்தின் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அந்த நடிகை மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

யார் அந்த நடிகை? என்ன கேள்வி அது? மலையாள திரையுலகில் நடிகையாக இருப்பவர் தான் பிரியாவாரியர். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்.

அந்த திரைப்படத்தில் மாணிக்க மலரே என்ற பாடல் மிகவும் வைரலாக பரவியது. பிரியா வாரியர் தன்னுடைய புருவத்தை தூக்கி கண் சிமிட்டுவது ரசிகர்களுக்கு இடையே அதிக வரவேற்பை பெற்றது.

பிரியா வாரியர் ஃபைனல்ஸ் என்ற திரைப்படத்தில் பாடகர் நரேஷ் ஐயர் உடன் சேர்ந்து “நீ மழவில்லு” என் என்ற பாடலை பாடியவர். இணையதளத்தில் எப்போதுமே அக்டிவ்வாக இருப்பார் பிரியா வாரியர்.

அவருக்கு இன்ஸ்டா வில் 6.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். பிரியா தனது நண்பர்களுடன் வெளியில் செல்லும் பொழுது எடுக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவார்.

அவ்வாறு வெளியிடும் படங்களை பற்றி பலர் அனாவசிய கருத்துக்களை பதிவிடுவதை கண்டு கோபம் கொண்ட பிரியா வாரியர் “என் நண்பர்களுடன் நான் என்ன செய்கிறேன், என் வாழ்க்கை எப்படி வாழ்கிறேன், எப்படி வாழ வேண்டும்” என்பது பற்றி எனக்கு தெரியும்.

உண்மை செய்திகளை மட்டும் தாருங்கள். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். என் வாழ்க்கையை வாழ எனக்கு தெரியும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

கார் விபத்தில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி.. வைரல் புகைப்படம்!!

யாஷிகா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் பெரிய அளவு வெற்றி பெறாமல் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில சேட்டை செய்தாலும் ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்றார்.

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மிகவும் பிரபலமான அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பின்பு நோட்டா, கழுகு 2 மற்றும் ஜாம்பி ஆகிய படங்கள் வெளியாகின இதில் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழி வள்ளி செட்டி பவானி ஆகிய நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே உள்ள சூளேரிகாடு பகுதியில் காரில் சென்று விபத்துக்கு உள்ளாகினர். இதில் சம்பவ இடத்திலேயே அவரது தோழி மரணம் அடைந்தார்.

தற்போது யாஷிகா ஆனந்த் மீது 3 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அதிவேகமாக ஓட்டுதல் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டது என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஸ்ரீகாந்தின் தோழியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் மனவருத்தத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

திரில்லர் கதைக்களத்தில் நடிகை நயன்தாரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த என, இரு படங்களின் படப்பிடிப்பை நயன்தாரா முடிவித்துவிட்டார்.

மேலும் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நடந்து வருகிறது.

இந்நி்லையில் நடிகை நயன்தாரா, புதிதாக உருவாகவும் திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறாராம்.

இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார்.

நடிகை நயன்தாரா, இதற்கு முன் மாயா, ஐரா, டோரா, இமைக்க நொடிகள் போன்ற திரில்லர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய யாஷிகாவின் நிலைமை?- அவரது தோழி குடும்பத்தின் சோகமான பதிவு!!

யாஷிகா ஆனந்த்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்நிகழ்ச்சிக்கு பிறகு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வந்த அவர் படங்களிலும் நடித்து வந்தார்.

அண்மையில் அவர் தனது தோழியுடன் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தற்போது குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது யாஷிகாவின் தோழி பவானியின் தங்கை ஷ்ரவானி, பவானியை பற்றி விசாரித்தவர்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் குடும்பம் எந்த மனநிலையில் உள்ளது என்பதை சொல்ல கூட முடியவில்லை என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

T-shirt-அ இறுக்கி செம்ம Tight – ஆ காட்டும் பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர்,

Tshirt அணிந்து கொண்டு அதை பின் கையால் இறுக்கி பிடிச்சு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அலுத்துக் கொள்வது போல் அலுத்துக்கொண்டு போட்டோக்களை டவுன்லோட் செய்து வருகிறார்கள்.

மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ள மேக்னா ராஜ்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

மேக்னா ராஜ்..

தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ்.

அதன்பின் மலையாளம் கன்னடம் என நிறைய படங்களில் நடித்தவர், கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த வருடம் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்த வருட இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது

தற்போது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் மேக்னாராஜ்.

இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மகன் பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது.

அதை கொண்டாடும் விதமாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு நஸ்ரியா உள்ளிட்ட அவரது நெருங்கிய தோழிகள் பலரும் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

விஜய்க்கு அவரது சிலையை பரிசளித்த கன்னட ரசிகர்கள்!!

விஜய்க்கு..

தமிழக அரசியல் அரங்கில் விஜய் வருவாரா, மாட்டாரா என கடந்த சில வருடங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அவரது ரசிகர்களை விஜய்யை ‘இளைய தளபதி’ என அழைத்து வந்ததை சில வருடங்களுக்கு முன்பு ‘தளபதி’ என மாற்றி அழைக்க வைத்தார் விஜய்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விஜய் பெயரில் கட்சியைப் பதிவு செய்து சர்ச்சைக்கு உள்ளானார் விஜய்யின் அப்பா.

புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இதுவரை விஜய் சந்தித்து கொரானோ நிவாரண நிதி வழங்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் நிலவி வருகிறது.

இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதியம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் விஜய்யிடம் நற்பெயரை வாங்குவதற்கு பரிசுகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது- கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய்யின் ஆளுயர சிலை அவருக்கு பரிசளித்துள்ளார்கள்.

சமூக வலைத்தளங்களில் அந்த சிலை பற்றிய செய்தி வைரலாகப் பரவி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராயை சந்தித்த பிரபல தமிழ் நடிகை.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா ராய்..

உலக அழகியாக பட்டம் பெற்ற பின்னர் இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை தான் ஐஸ்வர்யா ராய்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும் தற்போது இவர் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரின் குடும்பத்துடன் நேரில் சந்தித்துள்ளார்.

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், வரலக்ஷ்மி, சரத்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் உள்ளனர்.