அமிர்தா ஐயர் வெளியிட்ட வலிமை படத்தின் வீடியோ- குஷியில் ரசிகர்கள்!!

அமிர்தா ஐயர்………..

பிகில் படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளில் கேப்டனாக வரும் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார் அமிர்தா ஐயர். தமிழ் சினிமாவில் தெனாலிராமன் லிங்கா போக்கிரி ராஜா தெறி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின் படைவீரன் காளி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்துள்ளார்.

இன்று காலை முதல் வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் டுவிட்டரில் டிரெண்ட் பண்ணிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில் அமிர்தா ஐயர் இவ்வாறு லீக் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளார்கள்.

இப்படத்திற்கு இசையமைத்து உள்ளதால் பாடல்கள் வேற லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதுபோல அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு குத்து பாடல் என்பதால் எ திர்பார்ப்பு எகிறியுள்ளது. இவ்வாறு அமிர்தா ஐயர் வீடியோவை வெளியிட்டுள்ளதால் அவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது.

90 கிட்ஸ்களின் தேவதை சிரிப்பழகி ’லைலா’ இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா..??

லைலா………..

லைலா என்றதுமே சிரித்த முகத்தோடு நடிக்கும் அவரது முகம் தான் நம் எல்லோருக்கும் நினைவில் வரும். கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா.

உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா? என சீயான் விக்ரமோடு சேர்ந்து லைலா போடும் நடனம் ரொம்ப பிரபலம். மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய வகையில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார் லைலா. பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இதேபோல் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு ஜோடியாக ‘தீனா’ படத்தில் செம நடிப்பை வழங்கியிருப்பார் லைலா.

சினிமாவில் பிஸியாக இருந்த போதே, கடந்த 2006ம் ஆண்டு மே மாதம், ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹெதீன் என்பவரை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் தனது சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லைலா. அதன் பின்னர் இப்போது சில விளம்பரங்களில் தோன்றுகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருக்கிறார்.

இப்போது நடிகை லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்திருக்கும் மகன்கள், கணவரோடு இருக்கும் புகைப்படத்தை நீண்ட காலத்துக்கு பின்பு சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிரார் நடிகை லைலா. அதைப்பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.

அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரியில் தான் ஆரம்பமா?? படக்குழு வெளியிட்ட அ திர்ச்சி தகவல்!!

அண்ணாத்த………

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது. பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவில் உள்ள நால்வருக்கு கொரோனா தொற்று வந்ததால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்த்தும் கொரோனா சோதனை செய்து கொண்டதில் அவருக்கு நெகட்டிவ் வந்தது. இருப்பினும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் சில தினங்கள் சிகிச்சை பெற்று பின் சென்னை திரும்பி மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறார்.

அரசியலுக்கு வரவில்லை என நேற்று ரஜினிகாந்த் அறிவித்து அரசியல் உலகிலும், சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இனி, அவர் சினிமாவில் மட்டுமே தொடர்ந்து நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாத காலம் வரை அவர் ஓய்வெடுத்தபின் பிப்ரவரியில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே எடுத்த காட்சிகளின் இறுதிப் பணிகளை அதற்குள் முடித்துவிடவும் முடிவு செய்துள்ளார்களாம்.

பிப்ரவரிக்குப் பிறகு எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி எப்படியும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு படத்தை வெளியிடும் அளவில் தயாராவார்கள் எனத் தெரிகிறது.

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ரிலீஸ் தேதி: அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு!

ஈஸ்வரன்…

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘ஈஸ்வரன்’, இந்தப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள அட்டகாசமான போஸ்டரில்

இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14-ஆம் தேதி வர்ரான்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 14-ஆம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஜனவரி 14-ஆம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் பொங்கல் தினத்தில் விஜய் மற்றும் சிம்பு படங்கள் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘வேலுநாச்சியார்’ படத்தில் நடிக்கின்றாரா நயன்தாரா? அதிகாரபூர்வ அறிக்கை!

நயன்தாரா…

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல் வெளிவந்தது.

சமீபத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் அதில் நயன்தாரா நடிக்கவிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் படத்தில் நயன்தாரா நடிப்பதாக சில செய்திகள் ஊடகங்களில் பரவி வருகின்றன.

நயன்தாரா அந்த படத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார், மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது நயன்தாரா தரப்பில் உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனையடுத்து ’வேலுநாச்சியார்’ படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியெனில் வேலுநாச்சியார் கேரக்டரில் நடிக்கும் நடிகை யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

‘மாஸ்டர்’ படத்திற்கு புரமோஷன் செய்த தனுஷ்!

தனுஷ்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது புரமோஷன் பணிகளை தொடங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை புரமோஷன் செய்யும் வகையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த செய்தியாகும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க ரசிகர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை என்பதையே அனைவரும் இந்த படத்தை பார்த்து உணர்ந்து கொள்வார்கள். தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திரையரங்குகளில் ’மாஸ்டர்’ படத்தை பாருங்கள் என்று தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனுஷின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ நாயகி!

சிம்பு…

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்றும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியாபவானிசங்கர் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தாசில்தார் கேரக்டருக்கு ஒரு தமிழ் பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன் என்றும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தாசில்தார் கேரக்டருக்கு பிரியா பவானி சங்கர் பொருந்துவார் என்று முடிவு செய்தேன் என்றும்,

அவருடைய முந்தைய படங்களை பார்த்தபோது அவருடைய இயற்கையான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றும், எனவே அவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்தேன் என்றும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் தாசில்தார் கேரக்டர் மிகவும் போல்டான, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஒரு கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் பிரியாவுக்கு நல்ல புகழை பெற்று தரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

’பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவின் கேரக்டருக்கு ஜோடி இல்லை என்றாலும் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடி இருக்குமா? அப்படியே இருந்தால் அந்த கேரக்டரில் நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களால் தான் தகுதியில்லாதவர்கள் வீட்டில் இருக்கின்றார்கள்: ஆரி ரசிகர்களுக்கு அனிதா பதிலடி!

அனிதா…

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் ஆரியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போட்டியாளர்களை அவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது

குறிப்பாக தாய்மை குறித்து ஆரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை போட்ட சம்யுக்தா, ஆரியுடன் நேருக்கு நேர் மோதிய அர்ச்சனா, ஆரியிடம் கோபமாக பேசிய அனிதா ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேறியதே இதற்கு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதா குறித்து ஆரி ரசிகர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் ’ஆரி ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் அதை நிறைவேற்றி விடுவார்கள், உங்களை வெளியேற்றியதை போல’ என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு அனிதா பதிலடி கொடுத்துள்ளார்

ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்கு தான் அசிங்கம் என்றும் இது ஆரிக்கே பெருமை இல்லை என்றும், போட்டியில் நன்றாக விளையாடாதவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் விதி என்றும் உங்களை போன்றவர்களால் தான் தகுதி இல்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்

அதேபோல் உங்களுடைய கருத்தை கேட்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்றும், ஆரி ரசிகர்களின் ஓட்டு எனக்கு வந்ததாக சொல்வதில் எனக்கு பெருமை இல்லை என்றும், எனக்கே எனக்காக ஓட்டுகள் வந்தால் தான் எனக்கு பெருமை என்றும், ஆரி ரசிகர்களின் ஆதரவுடன் இறுதிப்போட்டிக்கு செல்வதைவிட அவரது குற்றங்களை சொல்லிக்காட்டி எனக்கு வாக்களித்தவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதைத்தான் பெருமையாக நான் நினைக்கிறேன் என்றும் அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்

விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படம்…. முதல் அப்டேட் வந்தாச்சு!

விஜய் சேதுபதி…

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன.

இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி!

நிவின்பாலி…

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மம்முட்டியை வைத்து தான் இயக்கிய பேரன்பு படம் மூலம் ரசிகர்களை நெகிழ வைத்தார் இயக்குனர் ராம்,.

அதேசமயத்தில் அவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் வேறுவிதமான களத்தில் இளைஞர்களை மிரள வைத்தது.

இந்தநிலையில் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் ரிச்சி என்கிற படம் மூலம் நிவின்பாலி அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு வெற்றியையும், தமிழில் வரவேற்பையும் பெற்றுத்தர தவறிவிட்டது.

ரிச்சி, மூத்தோன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம், வித்தியாசமான கலைப்படைப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நிவின்பாலி, இயக்குனர் ராம் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றால் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை.