மாடர்ன் உடையில் ஜம்முனு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நம்ப சென்னை வாசி. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரை டு வெள்ளித்திரை சென்றவர்.

கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து படங்களில் நடிக்கும் நடிகை. மணிகண்டனின் காக்கா முட்டை, மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா, விருமாண்டியின் க பெ ரணசிங்கம் என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆர் கண்ணன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற The Great Indian Kitchen ரீமேக்கில் நடித்து வந்த நேரத்தில் தான் அடுத்த லாக் டவுன் அமலுக்கு வந்தது. சமீபத்தில் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ கூட பகிர்ந்தார்.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். இதோ அந்த புகைப்படம்..

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கப்போகும் சிம்பு.. மாஸ் அப்டேட் இதோ!

சிம்பு..

கொரானா தொற்று சமயத்தில் பல நெகட்டிவ் விஷயங்கள் நடந்துள்ளது. இது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் பாசிட்டிவ் சேஞ் ஓவர் கொடுத்தவர் சிம்பு என கூட சொல்லலாம். உடம்பை குறைத்தார். தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் மாறுதல்கள் நிறைய உள்ளது என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

ஈஸ்வரன் ரிலீசுக்கு பின் மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து உள்ளது படங்கள். இந்நிலையில் சிம்பு இன்டர்நேஷ்னல் நிகழ்ச்சியான Survivor 2021 ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 40 சீசன் கடந்த நிகழ்ச்சி அது.

16 போட்டியாளர்களை கொண்டு சென்று ஒரு தீவு போன்ற சூழலில் விட்டுவிடுவார். அங்கு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும், எலிமினேஷன் நடக்கும், இறுதியில் இருக்கும் கடைசி நபர் தான் வெற்றியாளர். சுமார் 90 – 100 நாட்கள் ஆகும்.

ஏற்கனவே 2012 இல் சமீர் கோச்சர் தொகுத்து வழங்க ஒரு சீசன் ‘Survivor India ‘ என பிலிப்பைன்ஸ் தீவில் நடந்து. இம்முறை தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்தது, சிம்பு தரப்பு ஓகே சொல்லிவிட்டார்கள். நம் வெர்ஷனில் சினிமா, டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்கள் என்கின்றனர்.

ஆக பிக் பாஸ் கமல், master chef விஜய் சேதுபதி போல survivor சிம்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

“நீங்க போட்டதுலியே இதான் கிளாமரான டிரெஸ்” – ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் Photo !

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள்.

தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தநிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தொடை முழுதும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க போட்டதுலியே இதான் கிளாமரான டிரெஸ்” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

“தமன்னாவா இப்படி டிரஸ் பண்ணிருக்காங்க..?” Airport – இல் அப்படியே வந்த தமன்னா – வாயை பிளந்த ரசிகர்கள் !

தமன்னா..

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்த முடித்துள்ளார். இதில் November story சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்நிலையில், படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள தம்மு அங்கே முன்னழகு மேல் ஏறிய Tshirt ஒன்றை அணிந்து கொண்டு படு சூடாக வந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “தமன்னாவா இப்படி டிரஸ் பண்ணிருக்காங்க..?” என்று அதிர்ச்சி ஆகியுள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“ப்ப்பா..சின்னத்திரை நயன்தாரான்னு சும்மாவா சொன்னாங்க..!” – வேற லெவல் Photoshoot செய்த வாணி போஜன் !

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார்.

பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள செம கிளாமராக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ப்ப்பா..சின்னத்திரை நயன்தாரான்னு சும்மாவா சொன்னாங்க…” என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

இப்போ நயன்தாராவை விட இவங்களுக்கு தான் மவுசு அதிகம் – கோலிவுட்டில் திடீர் திருப்பம் !

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் டாப் கியரில் போய் கொண்டிருப்பவர் நயன்தாரா. பல காதல் தோல்விகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் உச்ச நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.

அப்பேர்பட்ட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு தற்போது ஒரு நடிகை தன் டஃப் கொடுத்து வருகிறார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .

இந்நிலையில், நடிகை நயன்தாராவை விட இவருக்கு அதிக படங்கள், குடும்பத்தினர் மத்தியில் அதிக வரவேற்பு என பிரியாவின் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா ரசிகர்களோ இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வந்தா பாக்கலாம் என லெப்ஃட்டில் ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஐயோ, நயன் கைய விடவே மாட்டுறாரே…” நயன்தாராவுடன் தனி விமானத்தில் வந்து இறங்கிய விக்னேஷ் சிவன் !

நயன்-விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன்.

போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடியின் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி பார்க்கலாம்.

அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த நெருக்கமான புகைப்படங்களை

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமையா பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஐயோ, நயன் கைய விடவே மாட்டுறாரே…” என்று கமென்ட் அடித்து கேலி செய்கிறார்கள்.

கல்யாண வேலையில் பிஸியாக இருக்கும் நடிகை சாய்பல்லவி ! வைரல் வீடியோ !

சாய் பல்லவி..

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியாக விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல விடிந்தால்,

எழுந்தால், புகைப்படங்களை வெளியிட மாட்டார். எப்பவாது தனக்கு தோன்றினால் போட்டோக்களை பதிவிடுவார்.

அந்தவகையில் தனது குடும்ப உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

திருமணம் எப்போது ? தனக்குத் தானே டாப்ஸி நிபந்தனை!!

டாப்ஸி..

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள டாப்ஸி தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என எல்லா கதாநாயகிகளை போலவே வழக்கமான பதிலை அளித்துள்ளார்.

அதேசமயம் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார், அதாவது எப்போது, தான் வருடத்திற்கு 2 படங்களில் மட்டும் நடிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிகில்’ நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ!!

ரெபா மோனிகா..

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ’எப்ஐஆர்’ ’மழையில் நனைகிறேன்’ ஆகிய படங்களிலும் ஒரு சில கன்னட, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரெபா மோனிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரெபா மோனிகாவின் வேற லெவல் இசைத்திறமையை அறிந்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து, இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)