Big Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் !

சம்யுக்தா…

பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ்

கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.

இதில், நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரி, பாலாஜி ஆகியோர் Saved என கமல் கூறினார்.

அதன் பிறகு  சோம், சனம், நிஷா காப்பாற்றப்பட்டனர். ரமேஷ், சம்யுக்தா இருவர் மட்டுமே இருந்ததால் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.

பின், சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். சம்யுக்தா நாமினேஷன் லிஸ்டில் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் அவர் வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய மகன் ரயான் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் !

தமிழ் ராக்கர்ஸ்…

பல படங்கள் சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். இருக்கும் நிலைமையை பார்த்தால் Lock Down இன்னும் Extend ஆகி கொண்டுதான் போகிறது. ஊரடங்கு தற்போதைக்கு முடியாது, அதனால் மக்கள் திரையரங்குக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சும். அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன. இதன் மூலம் OTT நிறுவனங்கள் புதிய Subscribers ஐ ஏற்ற முடியும்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி, OTT நிறுவனங்களுக்கும் சரி வில்லன் யார் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான். பத்து ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே தண்ணி வந்தது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.

இவர்களை முடக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, எரிக்க எரிக்க மீண்டும் வரும் Phoenix பறவை போல் வேறொரு TLD-யுடன் அடுத்த நிமிடமே வந்தார்கள்.

இப்படி மாஸ் காட்டி வந்த தமிழ்ராக்கர்ஸின் ஆட்டத்தை அடக்கியுள்ளது முன்னணி OTT தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம். OTTயில் வெளியாகும் படங்களை அப்படியே லவட்டி HD தரத்தில் பதிவேற்றம் செய்து OTT தளங்களுக்கும் தண்ணி காட்டியது தமிழ்ராக்கர்ஸ்.

இதனால், அமேசான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு தனியாக தொழில் நுட்ப குழு ஒன்றை அமைத்து இரவு பகலாக மூன்று மாத தீவிர முயற்சிக்கு பின்னர் இப்படியான தளங்களை அக்கு வேர், ஆணி வேராக பிச்சு எரிந்துள்ளார்கள்.

இந்த தகவல் வந்தவுடன், தமிழ்ராக்கர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ” TAMIL BLASTERS” என்ற இணையத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர் தமிழ்ராக்கர்ஸ். இது நிஜமாகவே தமிழ் ராக்கர்ஸ் குழு செய்த வேலை தானா?

தல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் ! வைரலாகும் வீடியோ !

அஜித்…

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்தி கொண்டிருப்பவர் அஜித். அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார்.

படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமாரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வர, யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் அவர்களின் பொழுது போக்கிற்காக சில பொழுதுகள் ஜாலியாக இருப்பார்கள் அப்படி இருக்கையில் தல அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை போட்டு மாஸ் குத்து குத்தி உள்ளார்கள் .

நடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் ! சியான் ரசிகர்கள் அ திர்ச்சி !

விக்ரம்…

பெரும்பாலும் அவசர போலீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் Prank Call வருவது சகஜம். ஆனால் அதை போலீஸ்காரர்கள் அசால்டாக எடுத்துகொள்ள முடியாது.

இப்படி இருக்கும் நிலையில், பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டிற்கு வெ டி கு ண் டு மி ர ட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் Control ரூமிற்க்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

ஆனால் அது ஒரு Prank என்று கண்டறிந்த போலீசார் தற்போது அந்த ம ர்ம நபரை தேடி வருகிறார்கள்.

சியான் விக்ரம் த ற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் !

வனிதா….

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார்.

திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள்.

ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி,

யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது Hair Coloring செய்து கலர் கோழி குஞ்சு போல் போஸ் கொடுத்துள்ளார்.

நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது?

நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது ’நிழல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா நடித்துவரும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

தற்போது விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம்.!

ஓ.டி.டி…

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன.

ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.

தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் சினிமா காட்சிகளும் அவ்வப்போது ரத்து செயப்படுகின்றன.

இதனால் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. எனவே சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தயங்கி வருகிறார்கள்.

புது படங்களை ஓ.டி.டி. யில் வெளியிட்டால் படம் எடுக்க செலவழித்த பட்ஜெட்டைவிட லாபம் பார்க்கலாம், ரசிகர்களும் அதிகம்பேர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்து விடுவார்கள் என்று கருதுகின்றனர்.

ஏற்கனவே சூர்யா நடித்த ‘சூரரைபோற்று’, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’, நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாயின. இதில் தயாரிப்பாளர்கள் லாபமும் பார்த்தார்கள்.

இதையடுத்து சுமார் 18 படங்களை ஓ.டி.டி.யில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பாரீஸ் பாரீஸ்’, ‘கர்ஜனை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘திகில்’, ‘ஜிந்தா’, ‘ஆட்கள் தேவை’, ‘மாமாகிகி’, ‘யாதுமாகி நின்றாய்’, ‘ஹவாலா’, ‘மதம்’ உள்பட 18 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வெளிவர தயாராகி வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’, சித்தார்த் நடித்துள்ள ‘சைத்தான் கா பச்சா’, மாதவன் நடித்துள்ள ‘மாறா’ ஆகிய படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன.

ரம்யா பாண்டியனின் உறவினர் அருண் பாண்டியன் மகளா இது?

கீர்த்தி பாண்டியன்…

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானாலும் போதிய படவாய்ப்புகள் இல்லாமல் தவித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையடுத்து போட்டோஹுட் பக்கம் திரும்பி இடுப்பைகாட்டி இளசுகளை தன் பக்கம் இழுத்தார்.

யாருக்கும் முகம் தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் போட்டோஹுட்டால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்கூ வித் கோமாளியில் பங்கேற்று பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்று கூறப்பட்டது. ஆனால் அருண் பாண்டியனின் உறவினர் மகள் என்று உறுதியானது.

ஆனால் அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் தும்பா படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.

இதையடுத்து பேசப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், அக்கா ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பார் போல என்று கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்து வருகிறார்கள்.

கவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம்! மருத்துவனையில் அனுமதி – எதிர்பாராத சம்பவம் !

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறினார். இந்த வாரம் சீரியல் நடிகர் அசீம் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 14 ஐ சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் நடிகர் ராகுல் ராய்.

52 வயதானவர் ‘LAC: Live the Battle’ என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கார்கில் பகுதியில் எடுக்கப்பட்டு வந்தது.

கடும் குளிரால் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமா அமைப்பின் தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம் !

ஏ.ஆர்.ரகுமான்…

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம் பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனித்துவமான அமைப்பாகும்.

சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமா, டி.வி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்பு இதில் இருக்கும்.

இந்த அமைப்புக்கு ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவு அளித்துள்ளது. சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.