சீரியலில் இருந்து விலகும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா !

ஜோவிட்டா…

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. இவர் நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவரது ஜோடியாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்பிகா, ராதாரவி, பானுசந்தர் உள்பட பலர் நடித்தனர். சுந்தர்.சி உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கி இருந்தார். படத்தின் பணிகள் முடிவடைந்தும் படம் இன்னும் வெளிவரவில்லை.

இதனால், பூவே உனக்ககாக என்ற தொடர் மூலம் சின்னத்தரையில் அறிமுகமானார் ஜோவிட்டா. சில மாதங்களே நடித்து வந்த நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுகிறார்.

இந்த தகவலை அவர் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தெரிவித்து விட்டார்.

இதனால் தொடரின் கதையில் சில மாற்றங்கள் செய்த அவரது கேரக்டரை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

ஜோவிட்டாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவர் விலகுவதாகவும், பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் விலகுவதாகவும்

இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இதுவரை இத்தனை பேர் பார்த்துள்ளார்களா?

சூரரைப் போற்று…

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

நிஜ கதையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்துவிட்டார் சூர்யா.

OTT தளத்தில் வெளியான இப்படத்தை முதல் நாளில் மட்டுமே 50 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்களாம்.

தற்போது ரிலீஸ் ஆகி 14 நாட்களுக்கு மேலானது, இதுவரை படத்தை 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

OTT தளத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா?- கசிந்த உண்மை தகவல்!!

சுசித்ரா…………

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சுசித்ரா. அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைக்க வெளியேறினார் என்று தான் நாம் நினைக்கிறாம்.

ஆனால் உண்மை கதையே வேறு, அவர் Quarantine இருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்டினார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவரை ஷோக்கு அனுப்பலாமா என்ற சந்தேகம் இருந்ததாம்.

அப்படியும் நிகழ்ச்சிக்குள் சென்ற சுசித்ரா, டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லையாம், பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் வீட்டிற்குள் அழுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்றே இருந்துள்ளார்.

இதனால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விடலாம் என யோசித்துள்ளார்கள். ஓட்டுகள் குறைவாக வர அவர் வெளியேறிதாக கூறப்படுகிறது.

சீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது ?? படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

நடிகை ம ஞ்சரி……..

சின்னத்திரையில் கோலங்கள், அண்ணாமலை சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ம ஞ்சரி.

நடிகை குட்டி பத்மினி மூலம் உறவுகள் சீரியலில் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டினார். பின்பு வி ல் லியாக நடிப்பில் கலக்கி வந்தார்.

திருமணத்திற்கு பின்பு குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே சீரியலில் நடித்த இவர், கோலங்கள் சீரியலின் போது நிறைமாத க ர் ப்பிணியாக இருந்தார்.

பின்பு பெண் குழந்தை ஒன்றினைப் பெ ற்றெடுத்துவிட்டு சிங்கப்பூரில் தனது வாழ்க்கையை தொடர ஆரம்பித்தார். அங்கம் சீரியல்களில் நடித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் சீரியலில் நடிக்கும் போது மிகவும் குண்டாக இருந்த இவர் தற்போது உ ட ல் எடையைக் குறைத்து பயங்கர ஒல்லியாக மாறியுள்ளார்.

தற்போது மகளுக்கு 12 வயதாகும் நிலையில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் எந்த து றையை தெரிவு செய்வது என்பது அவளின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

பணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்!!

நடிகை ப்ரியா…….

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். பிளாக் காமெடி வெப்சீரிஸ் ஆக உருவாகி வரும் இந்த தொடரில் முகம்மது அயூப் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த வெப்சீரிஸில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்சீரிஸ் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ப்ரியா ஆனந்த் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

 

அதில் 2000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்து உட்கார்ந்திருப்பது, பணமழையில் அவர் நனைந்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’ப்ரியா ஆனந்த்’ நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ மற்றும் துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் கன்னடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்றின் படப்பிடிப்புகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)

ஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு!!

சுசித்ரா……….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுசித்ரா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் போஸ்ட்டாக விநாயகர் புகைப்படத்தை பதிவு செய்து என்னுடைய பாதுகாவலர் அவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பழைய டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள சுசித்ரா அதன்பின் பிக்பாஸ் என்னும் ஜெயிலில் இருந்து தப்பிவிட்ட்தாக இன்னொரு போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு சுசித்ரா பதிவு செய்த இந்த மூன்று போஸ்ட்டுகளும் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தான் வைல்ட் கார்டு போட்டியாளராக சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார். முதல் வாரத்தில் போட்டியாளருக்கு நாமினேஷன் கிடையாது என்பதால் அந்த வார நாமினேஷனில் அவர் தப்பித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)

மேலும் அடுத்த வாரம் நாமினேஷனில் சுசித்ரா சிக்கினாலும் அந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதால் அந்த வாரமும் சுசி தப்பித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)

இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் நாமினேஷன் சிக்கிய நிலையில் முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. சுசியின் வெளியேற்றத்தை அடுத்து தொலைக்காட்சி நடிகர் முகமது அஜீம் மற்றும் சுரேஷ் ஆகியோர் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)

சூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித்? வைரலாகும் புகைப்படம்!!

ஷாலினி………..

நடிகர் சூர்யா கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். கடந்த 23 ஆண்டுகளில் அவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் விஜய், மாதவன், பிரசாந்த் உள்பட ஒருசில முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த ஷாலினி, சூர்யாவுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் சூர்யாவுடன் இணைந்து ஷாலினி அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா, ஷாலினி அஜீத், ராதிகா மற்றும் ரீமா சென் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி……….

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று படுவிறுவிறுப்பாக இருந்தது. ஆரியின் கோபம், ஆரியை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்த போட்டியாளர்கள், அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருடைய குருப்பிஸத்தை வெளியே கொண்டு வந்த சனம், பாலாஜி என நேற்றைய நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று வரை ‘நீ என் மகன் போல’ என தாய்ப்பாசத்தை பாலாஜி மீது பொழிந்து வந்த அர்ச்சனா, நேற்று தன்னை பாலாஜி நாமினேட் செய்ததும் அவருடைய முகமே முழுக்க முழுக்க மாறிவிட்டது. குடம் குடமாக பொங்கிய தாய்ப்பாசம் திடீரென மறைந்து பாலாஜியை எதிரி போல் பார்க்க தொடங்கிவிட்டார்.

பாசம் என்ற மாஸ்க்கை போட்டு நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனாவை டார்கெட் செய்ய ஆரம்பித்த பாலாஜி இன்றைய முதல் புரமோவில் அவருடைய ஆதரவாளர்கள் யார் யார் என்பதை ஒப்பனாகவே சொல்லிவிட்டார். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் ’கேப்ரில்லாவுடன் வாதாடும் பாலாஜி, ‘எல்லாரும் என்மேல பழிபோட்டு என் பெயரை காலி பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க என்று கோபமாக பேசுகிறார்.

இந்த வாக்குவாதத்தில் திடீரென அர்ச்சனா நுழைய, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் நடக்கின்றது. ஒரு கட்டத்தில் அர்ச்சனா அக்கா என பாலாஜி சொல்ல,

என்னை அர்ச்சனா அக்கா என்று சொல்லாதெ, அர்ச்சனா என்று சொன்னால் போதும் என கையை நீட்டி அர்ச்சனா கோபமாக கூற, பாலாஜி தன்னுடைய வழக்கமான நக்கலில் ‘சரி அர்ச்சனா’ என்று மாஸாக கூறியது பார்வையாளர்களுக்கு செம விருந்தாக இருந்தது.

மொத்தத்தில் அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டி அவருடைய உண்மையான சொரூபத்தை பாலாஜி வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில் இனிவரும் நாட்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்!!

பிக்பாஸ்……..

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேசன் படலம் நடந்த நிலையில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் திடீரென நாமினேசனில் ஒரு திருப்பம் ஏற்பட்டது

ஏற்கனவே எவிக்சன் பாஸ் என்ற ஒரு அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் அறிவித்தார் என்றும் அந்த பாஸை பெற்ற ஆஜீத் ஒருமுறை பயன்படுத்தி எவிக்சனில் இருந்து தப்பித்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது திடீரென நாமினேஷன் டாப்புள் பாஸ் என்பதை பிக்பாஸ் அறிவித்தார். நாமினேசன் செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவருக்கு இந்த பாஸ் கிடைத்தால் அவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த டாபுள் பாஸை பெறுவதற்கு ஏழு பேர்களும் ஆர்வம் கொண்டனர். இருப்பினும் கடைசி கட்டமாக நிஷா, சனம் மற்றும் அனிதா ஆகிய 3 பேர் பிடிவாதமாக இந்த டாப்புள் கார்டை பெறுவதில் இருந்தனர். கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்த நிஷா ஒரு வழியாக சமாதானமாகியதால் அனிதாவுக்கு டாப்புள் கார்ட் கிடைத்தது

இந்த டாப்புள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை நாமினேட் செய்வதாக அறிவித்தார் அனிதா. முன்னதாக இந்த பாஸ் கிடைத்தால் யாரை நாமினேட் செய்வோம் என்ற அறிவிப்பில் அனிதா, பாலாஜி, சனம் ஆகிய மூவருமே அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்களை தான் நாமினேட் செய்வதாக அறிவித்தனர் என்பதும் அதே போல் அனிதாவுக்கு அந்த கார்ட் கிடைத்ததும் அர்ச்சனா குருப்பில் உள்ள சம்யுக்தாவை நாமினேட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அனிதா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சம்யுக்தா இடம் பெற்றுள்ளார். நாமினேஷன் படலத்தில் நடைபெற்ற இந்த திடீர் திருப்பம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!!

விஷால், ஆர்யா………..

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷாலின் 30வது படமாகவும், ஆர்யாவின் 32வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கவுள்ளனர்.