நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!!

நடன இயக்குனர் பிருந்தா…..

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ’ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிருந்தா இயக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிருந்தா இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘பாரிஜாதம்’, ‘லாடம்’, ‘போடா போடி’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார். டாட்சன் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பான இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு… ஹோட்டலில் போட்டியாளர்கள்… பிக்பாஸ் தொடருமா?

பிக்பாஸ் வீடு………

போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலருக்கு மரண பயம். ”நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்… ஆளை விட்டுடுங்க” என்றே கேட்டிருக்கிறார்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேச வைத்துக் கொண்டிருந்த பிக்பாஸுக்கே பெரிய டாஸ்க் தந்துவிட்டது இயற்கை.

ஆமாம்… இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதாலும் (ஏரிக்கும் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் இடத்துக்குமிடையிலான தூரம் சில கிலோமீட்டர்கள்தான்) நேற்று (25/11/20) காலையிலிருந்தே ஒருவித அசாதாரண சூழல் அந்த வீட்டுக்குள் நிலவியிருக்கிறது.

போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலர், “நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்… ஆளை விட்டுடுங்க” என்றே சொன்னார்களாம்.

நிலைமையை உணர்ந்து கொண்ட சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது.

அதன்படி நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள். தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இந்த மழை சூழலால் நேற்று ஒளிபரப்பாக வேண்டிய காட்சிகளில் பலவற்றை எடுத்து இன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பழைய காட்சிகள் சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.

RJ பாலாஜியின் மனைவி இவங்க தானா.. அட இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ அவரது புகைப்படம்..!!

RJ பாலாஜி………

ரோடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். சென்னை வெள்ளத்தின் போது தனி மனிதன் நினைத்தால் ஒரு பட்டாளத்தையே திரட்ட முடியும். என்பதை நிரூபித்து காட்டினார். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தன் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பம் அவரது தந்தையால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அவரது அம்மா தான் இருந்து ஆர்.ஜே.பாலாஜியை ஆளாக்கினார். பள்ளியில் படித்த காலத்தில் ஆர்.ஜே.பாலாஜி 19 பகுதிகளில் 27 வீடுகள் மாறியுள்ளதாகவும், 10 பள்ளிகளில் படித்துள்ளதாகவும் அவரே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் பி.எஸ்.சி. கம்யூட்டர் சைன்ஸில் பட்டம் பெற்றார்.12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாத ஆர்.ஜே.பாலாஜி கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார்.

ஹலோ கோயம்புத்தூர்” என்ற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பட்டையக் கிளப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வந்தார். சென்னையில் உள்ள பிக் எப்.ஃஎம்மில் வேலைக்கு சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தெரியாத ஒருவருக்கு போன் செய்து கலாய்க்க கூடிய அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி செம்ம சூப்பராக கையாண்டார்.பெயரும் புகழும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர் கிடையாது. கொஞ்சம் சமூக சிந்தனையும் கொண்டவர். லண்டனில் “க்ராஸ் டாக்” போன்ற நிகழ்ச்சியால் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள உடனடியாக அந்த மாதிரி ஷோவை இனி செய்ய மாட்டேன் என கைவிட்டார்.

இப்போது ஆர்.ஜே.பாலாஜி கோலிவுட்டின் ஒரு அங்கமாக இருந்தாலும் எப்.எம்மில் பணியாற்றி வந்த காலத்தில் சினிமா படங்களையும், திரைப்பிரபலங்களையும் செமையாக கலாய்த்துள்ளார். ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார். தற்போது நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன்” படத்தை இயக்கி, நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி அதன் வெளியிட்டிற்காக காத்திருக்கிறார். அவருடைய இயக்குநர் அவதாரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்களுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகேஷ்பாபு – விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம் !

இவனுக்கு சரியான ஆள் இல்லை…

மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன் இராணுவத்தில் நாயகன் மகேஷ் பாபு குழுவில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணத்திற்காக இரண்டாவது மகனை அழைக்கிறார் விஜயசாந்தி.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது மகனும் இறந்து விடுகிறார். மகன் இறந்த செய்தி அறிந்தால் திருமணம் நின்று விடும் என்பதால், திருமணம் நடந்து முடிந்த பிறகு விஜயசாந்தியிடம் சொல்லலாம் என்று அந்த ஊருக்கு செல்கிறார் மகேஷ் பாபு.

சென்ற இடத்தில் விஜய சாந்திக்கும் அந்த ஊரில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பிரச்சனை இருப்பதை மகேஷ்பாபு அறிகிறார். இறுதியில் விஜய சாந்திக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான பிரச்சனையை மகேஷ்பாபு தீர்த்து வைத்தாரா? மகன் இறந்த செய்தியை விஜயசாந்திடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனக்கே உரிய பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பேராசிரியராக வரும் விஜயசாந்தி கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

ஆக்ஷன் கலந்து குடும்பபாங்கான படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. பரபரப்பாக தொடங்கும் திரைக்கதை போகப்போக அடங்கிவிடுகிறது. மகேஷ் பாபு ரயிலில் ஊருக்கு வரும் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேத்துகிறார் இயக்குனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ சுவாரசியம் குறைவு.

ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று அதை அவர் ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்த பின் அவருடைய இமேஜ் வேற லெவலுக்கு சென்றது மட்டுமின்றி அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீட்டில் புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா தான் என்று அவரது ஆர்மியினர் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை இழந்து வருவது போல் தெரிகிறது.

குறிப்பாக ஆரிக்கு எதிராக யார் சண்டை போட்டாலும் உடனே அவர்களுக்கு ஆதரவாக ரம்யா சொம்பு தூக்குகிறார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய கருத்துக்கு ஆதரவாக ரம்யா பேசுவது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், ‘ஒரு பெண்ணிடம் பேச கூட தெரியவில்லை, இவனெல்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு, இவனுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை என்று அப்போதும் ரம்யாவிடம் தான் சம்யுக்தா கூறினார். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு என்று ரம்யா சம்யுக்தாவிடம் கூறவில்லை.

ஆரிக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசுவதும் ஆஜித்துக்கு ஆதரவாக மட்டுமே இருப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி உள்பட மற்ற சண்டைகளை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ரம்யா,

ஒருசில சண்டைகளில் மட்டுமே தனது ஆதரவை தெரிவிக்கும் பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் ரம்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் அபாயம் உள்ளது என்று என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீடு முழுக்க வெள்ளம் – ஆளை விடுங்க சாமி என ஓடிய போட்டியாளர்கள் – தொடருமா பிக்பாஸ் ?

பிக்பாஸ்…….

இந்த வருஷம் 2020 ஆரம்பிச்ச நாள் முதல் பி ரச்சனை – விறுவிறு சுறு சுறு என ஆரம்பித்த இந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை Lock Down தான். இந்தநிலையில், கொஞ்சம் Entertainment ஆக போய் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 – இல் தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து இந்த நிகழ்ச்சியை பேசும் பொருளாக்கி விட்டார். தற்போது, எல்லோருக்கும் Task கொடுத்த Big Bossக்கே Task கொடுத்துவிட்டது இயற்க்கை.

நிவர் புயலால் இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் Housemates சிலர், “ஆளை விடுங்க சாமி” என்று எஸ்கேப் ஆக பார்க்கிறார்களாம்

உடனே சேனல் புத்திசாலித்தனமாக பிரபல தனியார் ஹோட்டலில் எல்லா போட்டியாளர்களைத் தங்க வைத்துள்ளார்கள்.

வீட்டில் புகுந்த தண்ணியை அகற்றும் வேலைகள் முடிந்துவிட்டால், வழக்கம் போல் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இதனால் Episode பாதிக்காத விதத்தில், நேற்று நடந்த சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.

அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கும் சனம் !

பிக் பாஸ்…

பிக் பாஸ் வீடு நேற்று முன்தினம் முதல் கால் சென்டராக மாறி இருக்கிறது. போட்டியாளர்கள் இதில் கேட்கும் சில கேள்விகளை பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ரியோ அஜித்துக்கு போன் செய்து பேசி இருக்கிறார். வீட்ல எல்லாமே கேம், எல்லாமே strategy என யாரு சொல்வது என ஆஜித்திடம் ரியோ கேட்க, அதற்கு அவர் பாலா சொல்றார் என பதில் சொல்கிறார்.

அனிதா, சனம் போன்றவர்கள் நாங்கள் அனைத்தையும் கேம் ஆக தான் பார்ப்போம் என சொல்லும் போது, அவர்களின் friendship அழகாக இருக்கிறது என ரியோ சொல்ல, இதையெல்லாம் ஏன் ஆஜித்திடம் சொல்றாரு ரியோ என்று தான் நம் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. அதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரம்யாவே கேட்டுவிட்டார். பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் இவர் ஆஜித்திடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என கலாய்த்துள்ளார்.

மேலும் ரியோ தொடர்ந்து அன்பு.. அன்பு.. என பல விஷயங்களை பேசுகிறார். இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா ? என்கிற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். இப்படி ரியோ அன்பு பற்றி பேசி இருப்பது நெட்டிசன்கள் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் ஒரே ஒரு முறை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குப் போனார். ஆனால், அதற்கு பிறகு அர்ச்சனாவின் கேங்கில் ஐக்கியம் ஆகி, ஜெயிலுக்குப் போவதை சூப்பராக தவிர்த்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் ஜித்தனாக ரமேஷ் இருந்தால் ஜித்தியாக இருப்பது ரம்யா பாண்டியன் தான். ரமேஷுக்கு கால் போட்ட அவர், என்னை நாமினேட் பண்ணனும்னா என்ன ரீசன் சொல்வீங்க என ஆரம்பித்தார்.

நீங்க சைலன்ட் கில்லர், சிரிச்சுன்னே ஊசி போடுவீங்க என ஜித்தன் ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் அடித்து விட்டார்.ஜித்தன் ரமேஷ் சொன்னதை கேட்டதும், கடுப்பான ரம்யா பாண்டியன், ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறிவிட்டு, பின்னர் மீண்டும் பொறுமையை கையாண்டு, ரமேஷுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என யோசித்து, நிஷாவை நாமினேட் பண்ணனும்னா என்ன சொல்லுவீங்க என்று கொக்கிப் போட்டு ஸ்கோர் பண்ணார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கிறார் சனம். தன் தவறை உணர்ந்த ரியோ, பிக்பாஸ் முன்பு நடந்ததை விவரிக்கிறார். அடுத்த சண்டை தயார் நிலையில் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் வீட்டில் நுழைவது குறித்து பதிவு செய்த பிரேம்ஜி !

பிரேம்ஜி…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் விதமாக பல்வேறு டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு தருவது வழக்கம். பிரச்னைகளை கிளப்பிவிட்டாலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்றே பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் குசும்புத்தனம் செய்து கொண்டு அவ்வப்போது வெடிகளை கொளுத்திப் போட்ட சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது நிகழ்ச்சிக்கு பலவீனமானது.

ரசிகர்கள் தாண்டி திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகர் பரத், பிக்பாஸ் குறித்து பதிவு ஒன்றை செய்தார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள். அவர்களிடம் கன்டென்ட் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்திருக்கும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நிகழ்ச்சி காமெடியாகவும், பிக்பாஸ் வீட்டினர் கலகலப்பாக இருப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். பிரேம்ஜி ஸ்டைலில் கூறவேண்டும் என்றால், எவ்ளோவோ பண்ணிட்டோம்…இத பண்ணமாட்டோமா !!!

தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி, 2003-ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சத்திய சோதனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது.

மழையில் நனைந்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட புடவையில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- வைரல் புகைப்படங்கள்!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் 3வது சீசனில் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

நிகழ்ச்சியில் இருக்கும் வரை மிகவும் தைரியமாக எல்லா விஷயங்களை எதிர்த்து வந்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது மாடர்ன் போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டு மாடியில் மழையில் நனைந்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட புடவையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிலீசுக்கு தயாரான சனம் ஷெட்டியின் எதிர்வினையாற்று..!

எதிர் வினையாற்று…

இளம் டாக்டரான அலெக்ஸ், தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் எதிர் வினையாற்று. யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். ஆடுகளம் நரேன் , லட்சுமி பிரியா, சம்பத்ராம், அனுபமா குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி அலெக்ஸ் கூறியதாவது: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன.

சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே படத்தின் கதை. என்றார்.