சக்தி வாய்ந்த கல்லால் நடக்கும் விபரீதம்…. வொண்டர் உமன் 1984 விமர்சனம்!

வொண்டர் உமன் 1984…

நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும் இந்த கல்லை அபகரிக்க ஒரு கூட்டம் செயல் படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

கல்லை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது விவரம் இல்லாத ஒரு பெண்ணும் வேலைக்கு சேர்கிறார். ஆராய்ச்சியில் இந்த கல்லை வைத்துக் கொண்டு மனதில் நினைத்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பதை அறிகிறார்கள்.

இந்நிலையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விவரம் இல்லாத பெண், கிறிஸ் பைன் போல் சக்தி வாய்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கிறிஸ் பைன் இடம் உள்ள சக்தி எல்லாம் விவரம் இல்லாத பெண்ணுக்கு செல்கிறது.

இதே சமயம் வில்லனும் கல்லை அபகரித்து விடுகிறார். இறுதியில் கிறிஸ் பைன், இழந்த சக்தியை பெற்றாரா? வில்லனிடம் இருந்து சக்தி வாய்ந்த கல்லை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு பின்னணியில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

டிசி படங்களில் எப்போதும் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படம் நகர்கிறது.

கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ‘வொண்டர் உமன் 1984’ வொண்டர்ஃபுள்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ராஜேந்தர் !

டி.ராஜேந்தர்…

புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிய டி.ராஜேந்தர் தற்போது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தே ர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போ ட் டியிட்டு தோ ல்வியை தழுவினார்.

பின்னர் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக டி.ராஜேந்தர் இருந்து வரும் நிலையில் அதன் வி திமுறைகளின்படி வேறு எந்த சங்கத்திலும் ப தவி வகிக்க கூடாது.

இதனால் தற்போது டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.

நடிகை கீர்த்தி சுரேஷை கதற விடும் முன்னணி நடிகர்கள்.. நடிகை கதறல்!

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதே நிலைமை தற்போது தமிழிலும் ஏற்பட்டு வருவதாக சில கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இது ஏனென்றால், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டாராம்.

ஆனால் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால், கீர்த்தி மறுபடியும் உடல் எடை கூடி, கும்முனு மாறவேண்டுமாம்.

அப்போது தான் அவருடன் ரொமான்ஸ் செய்வோம் என்று முன்னணி நடிகர்கள் அடம் பிடிக்கிறார்களாம்.

“இனிமே சிம்பு Time-தான்” தெறிக்கவிடும் MUFTI தமிழ் ரீமேக்கின் Title !

சிம்பு…

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போவதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு.

கன்னட Blockbuster ஆன இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்று மாஸ் Title வைத்துள்ளார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” இனி சிம்பு Time- தான்” என்று Comment அடிக்கிறார்கள். பாதி ஷூட்டிங்கில் நின்ற இந்த படம், மீண்டும் படு ஸ்பீடாக துவங்க காத்திருக்கிறார்கள். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.

மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!

தனுஷ்…

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’’ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பதும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த செய்தியை தற்போது செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையவுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏற்பதாகவும் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து தனுஷ் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய முப்பெரும் கூட்டணி வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை – தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் விமர்சனம்!

தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்..

ஹாலிவுட்டில் வெளியான தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

மனித இனமும், மனித இனத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுத்தி அதை டி.வி.யில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இதில் புரட்சி ஏற்பட்டு சக்தி வாய்ந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியில் சக்தி வாய்ந்தவர்கள் தங்களுக்குள் நடைபெற்று வந்த சண்டையை முடித்துக் கொண்டார்களா? இவர்களுக்குள் சண்டை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் கதை அம்சம் கொண்ட படங்கள் வரிசையில் தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், மற்ற படங்களுக்கு நிகராக இந்த படம் அமையாதது வருத்தம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல், இந்த படம் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம், விறுவிறுப்பு இல்லாமல் படம் நகர்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், சண்டைக் காட்சிகளையும் ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. மற்ற ஹாலிவுட் படங்கள் போல் இப்படம் இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றமே…
மொத்தத்தில் ‘தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்’ சுவாரஸ்யம் இல்லை.

கொட்டும் வருமானம்! பணத்தை வாரி இறைத்த பிரபல மாடலிங் நடிகை! ஒருவருக்கு எவ்வளவு தெரியுமா?

கிம் கர்தாசியன்…

ஹாலிவுட் சினிமாவின் நடிகையான கிம் கர்தாசியன் விளம்பரங்கள், சினிமா என மிகவும் பிரபலமானவர்.

சமூக நல ஆர்வலர் தொழில் முனைவோர் என கலக்கும் இவர் புகைப்படத்தின் மட்டும் ரூ 2 கோடி முதல் ரூ 3.5 கோடி வரை சம்பாதிக்கிறாராம்.

இணையதளம், டிக் டாக் என கலக்கி வந்த இவர் அண்மையில் தன் குழந்தையை பொது இடத்தில் தொலைத்துவிட்டு தேடினார்.

மாடலிங்க் துறையில் இருக்கும்அவர் இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாராம் இழந்த சுமார் 500 பேருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ 37 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?

ராதிகா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் அசத்தலாக இருப்பதாக பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா கூறுகையில் ’நல்ல சினிமாவின் உணர்வை ஊக்குவிக்கும் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத்ராஜ் என்பவர் இயக்கிய ’கூழாங்கல்’ படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர் என்பதும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் அடுத்த படம்: டைட்டில், இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

சிம்பு..

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் 20வது படமான இந்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு உடன் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 பேருக்கு மட்டுமே கொரோனா… அண்ணாத்த படக்குழு அறிவிப்பு!

அண்ணாத்த…

கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அண்ணாத்த. அடுத்த மாதம் ரஜினி தனி கட்சி தொடங்க இருப்பதால் படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 4 பேருக்கு மட்டுமே கொரோனா,

ரஜினி மற்றும் இதர படக்குழுவினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.